பக்கம்:கல்வி எனும் கண்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கல்வி எனும் கண்



மாணவர்கள் ஆரம்பப் பள்ளிமுதல்-கல்லுரி வரையில் இடர்ப்பட வேண்டியுள்ளது. 5+8+3 என்ற பள்ளிநிலை மாறி) 5+5 என அமைக்கப்பெற்றது. 11+2+2 என்ற கல்வி நிலைமாறி 11+1 + 3 என மாற்றம்பெற்று, இன்று 10+2+3 என அமைகின்றது. கல்லூரியிலும் இடைநிலை வகுப்பு என்ற பேரேரியிலும் (இன்றைய +2 போன்றது) இரண்டாண்டுகள் அமைய, அடுத்து, பட்ட வகுப்பு (B.A., B.Sc., B.Com.) பட்டச் சிறப்பு வகுப்பு, (B.A.Hons etc), மேல் பட்ட வகுப்பு என்ற நிலையிலும் இருந்தன. மாணவர் தரம், தம் திறன், தகுதி கருதி அந்தந்த வகையில் கல்வி பயின்றனர். ஆனால் இந்த நிலையெல்லாம் இன்று இல்லை. ஒரே முறையான 10+2+3+2 என்ற வகையிலேதான் முதல் வகுப்பு தொடங்கி முதுநிலைவரை அமைகின்றது. ‘Hons’ என்ற சிறப்புநிலைக் கல்வியில் மாணவர் மூவாண்டுகள் தொடர்ந்து ஒரே பாடத்தினைத் திறம்படப் பயின்ற உயர்ந்த நிலை மாறிவிட்டது. பட்ட வகுப்பில் ஒரு பாடம், மேநிலையில் வேறு ஒரு பாடம் படிக்கவும் இன்று வகை உண்டு. இப்படிப் பயில்கின்றவர் எப்படித் தெளிந்த அறிவுடையவராக முடியும்? கடைக்கால் இல்லாமல் கட்டும் வீடாக அன்றோ அது இடிவுறும். நான் பச்சையப்பரில் தமிழ்த்துறைத் தலைவனாகப் பணியாற்றிய பதினைந்து ஆண்டுகளிலும் பட்ட வகுப்பில் சிறப்புத் தமிழ்ப் பாடம் பயின்றவரையன்றி வேறு யாரையும் எடுப்பதில்லை-பல்கலைக்கழகம் பரித்துரைத்தாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் பலருடைய கோபத்துக்கு ஆளானதும் உண்டு. ஆயினும் நான் இருந்த வரையில் என் கொள்கையில் வழாமலேயே மாணவர்களைச் சேர்த்துவந்தேன். மேலே காட்டியபடி எத்தனையோ வகையில் ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரிவரையில் புதுப்புது மாற்றங்களால் கல்வியின் தரமே மங்கிவிட்டது. மறுபடியும் எங்கோ சென்றுவிட்டேன்; மன்னிக்கவும்.

உயர்நிலைப் பள்ளியின் கல்வி நிலை பற்றி மறுபடியும் காணலாம். ஆறாம் வகுப்பு முதல் பள்ளி. இறுதிவரை ஐந்து