பக்கம்:கல்வி எனும் கண்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரம்பக் கல்வி

87


.வளர்ச்சிக்கு உரிய முயற்சி இல்லையே என வருந்த வேண்டி உள்ளது.

எல்லா ஊர்களிலும் பள்ளியும் நல்லாசிரியரும் இருக்க வேண்டுமல்லவா! அண்ணல் காந்தி அடிகளார் அன்று அதைத்தானே வலியுறுத்தினார். சுதந்திரம் பெற்றபின் எத்தனையோ வகையில் முன்னேற்றம் கண்டுள்ளோம் எனப் பேசுபவர்கள் மாந்தர் தம் ‘கண்’ நிலைகெடுவதைக் காணவில்லையே! ஒரு நாட்டின் எல்லா வளமும் கல்வியில்தான் உள்ளது என்பதை, அதைக் கண் எனக் காட்டியே வள்ளுவரும் ஒளவையும் பிறரும் கூறியுள்ளனரே! அத்தகைய கண் போன்ற கல்வி நாட்டில் நன்கு வளர்ச்சி பெறவில்லை. எங்கோ தென்கோடியில் ஒரு மாநிலம்-கேரளம் நூற்றுக்கு நூறு படித்தவர்கள் உளர் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளுகிறது. (அதில் ஒருவேளை 100க்கு 5 வீதம் கல்வி இல்லாமல் இருக்கலாம்) ஆனால் ஒவ்வொரு மாநிலமும் அந்த வகையில் முன்னேற வேண்டாமா? முன்னேறுகிறதா? நாட்டைத் தொழில் மயமாக்குவோம் என்பதைக் காட்டிலும் கல்வி மயமாக்குவோம் என்று கூறவேண்டாமா? உடன் தக்க நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முனைகிறது என நம்பிக்கை எழுகிறது

ஊர்தோறும் பள்ளிகள் இன்றேனும் உள்ள பள்ளிகளாவது ஒழுங்காக நடைபெறுகிறதா? இல்லையே. பல ஓராசிரியர் பள்ளிகள்-அந்த ஆசிரியர் வந்தால் உண்டு - இன்றேல் பள்ளி இல்லை. இரண்டாசிரியர் பள்ளிகளும் பல, ஐந்து வகுப்புகளை ஓர் ஆசிரியரோ இரு ஆசிரியர்களோ எப்படி நடத்த முடியும்? அவர்களும் தவறாது வருவதில்லை. பின், பிள்ளைகள் எவ்வாறு கல்வி கற்று முன்னேறுவர்? 1986ஆம் ஆண்டில் இந்தியாவில் ஓராசிரியர் பள்ளி, நாட்டுப்புறம் 31.27% நகர்ப்புறம் 6.29- இரண்டாசிரியர் பள்ளி, நாட்டுப் புறம் 34.07%. நகர்ப்புறம் 11.92- கிராமப்புறத்தில் மூன்றில் ஒரு பகுதி ஒரே ஆசிரியர் பள்ளிகளே என்று அரசாங்கக் கணக்கே சொல்லுகிறது. இந்த நிலையில் கல்வி வளருவ