பக்கம்:கல்வி எனும் கண்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரம்பக் கல்வி

91



முன் சென்றாலும்-சங்க காலத்திலோ பல்லவர் காலத்திலோ இத்தகைய ஊர் ஒற்றுமையினைக் காணமுடிகிறது. பின்னால் யார் யாரோ இங்கே வர, பிற்காலச் சோழர்காலத்துச் சாதிப் பிரிவுகள்-சமயப் பேர்ராட்டங்கள் பல தோன்றின. இன்றோ பாரதிதாசன் கூறியப்படி வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள்' என்றால்-சூழ்கின்ற பேதம் அந்தத் தொகை இருக்கும். இந்த அவல நிலையை இன்றைய அரசாங்கம் எப்படியும் போக்கித்தான் ஆகவேண்டும்.

பல நாடுகளைச் சுற்றிவந்த நான் இந்தக் கல்வி முறையினைப் போற்றும் அமெரிக்க நாட்டினைக் கண்டு வியந்தேன். மேலே நாம் கண்ட வகையில் இன்றேனும் ஊரின் ஒவ்வொரு பகுதியும்-வாஷிங்டன், சிகாகோ உட்பட்ட பெரிய நகரங்களிலும் அந்தந்த எல்லையில் வாழ்கின்றவர்களே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுகின்றனர். தெரு அமைப்பு, சுற்றுப்புறத் தூய்மை, கல்வி, நலத்துறை ஆகியவற்றை அவர்களே ஒரு குழு அமைத்து நன்கு பாராமரித்துக் கொள்ளுகின்றனர். அந்தந்த எல்லையில் அமைந்த வீட்டுவரி முதலிய விஷயங்களையும் அவர்களே வசூலித்துக் கொள்ளுகின்றனர். இந்த முறையினால் அங்கங்கே கல்வி நிலையங்கள் தக்க வகையில் செயல்படுகின்றன. இதுபற்றி என்னுடைய நூலில் (ஏழு - நாடுகளில் எழுபது நாட்கள்) குறித்துள்ளேன். இந்த நிலை, தமிழ்நாட்டில் இருந்த பழைய வட்ட, மாவட்டக் கழகங்களை எனக்கு நினைவூட்டின. ஒரு சிறு எல்லைக்கு ஒர் உறுப்பினர் அமைய-சுமார் 20 அல்லது 40 ஊர்களுக்கு -20 அல்லது 30 கிலோ மீட்டர். விட்டத்தில் அமைந்த ஊர்களுக்கு அவர் அடிக்கடி சென்று, ஆவன காண, ஊர்மக்களும் அவருடன் கூடித் தமக்கு வேண்டிய நலன்களைப் பெற்றனர். பின் பஞ்சாயத்து ஆட்சி என்ற பெயரில் பல மாற்றங்கள்.உண்டானபோதிலும் போதிய வளர்ச்சி இல்ல்ை. இதுபற்றி முன்னரே விளக்கியுள்ளேனாதலின் இங்கே அதிகம் எழுதத்தேவை இல்லை.