இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா
4
முன்னுரை
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
“கல்வெட்டில் தேவார மூவர்” என்ற இச்சிறிய பெரிய நூல் சமயத்துறையில் விளங்குவோர்க்கும், கல்வெட்டுத் துறையில் பயில்வோர்க்கும் பெரிதும் பயன்படும் என்பது உறுதி.
தென்னகத்தில் சைவ சமயத்தைப் புரந்த சோழர்கள் ஆட்சியில் தென் தமிழ் மக்கள் சைவசமய குரவரிடத்து எவ்வளவு பற்றுடன் திகழ்ந்தனர் என்பதும், அன்னோருடைய அருட்பாடல்களில் தோய்ந்து இருந்தனர் என்பதும் இந்நூல் நன்கு தெரிவிக்கும்.
இதனைப் புத்தக வடிவில் வெளிவரச் செய்கிறவர்கள், சேகர் பதிப்பக உரிமையாளர் திரு. வெ. சுந்தரம் அவர்கள் ஆவர். அன்னாருக்கு நன்றிக் கடனுடையேன்.
தமிழகப் பெருமக்கள் இந்நூலைப் பயின்று மூவர் பெருமைகளை அறிந்து உய்க.
அன்பன்,
கே. எம். வேங்கடராமையா