பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 73

திருநாவுக்கரசர் பிரதிமம்

பாதாதி கேசாந்தம் 22 விரலே 2 தோரை உயரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருள்விக்கப் பெற்றது. இவர் எழுந்தருளி நின்றபத்மம் இருவிரலே ஆறுதோரை உயரமுடையது. இதனொடும்கூடச் செய்த பீடம் எண்விரலே ஆறுதோரைச் சமசதுரத்து நால்விரல் உயரமுடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

ருத்ராகூச்சுரி பொன்னின் நூலில் கோத்த ருத்ராக்ஷம் ஒன்று உட்பட நிறை ஆறுமஞ்சாடியும் இரண்டுமா விலை காசு ஒன்று. ருத்ராகூடிச்சுரி பொன்னின் நூலில் கோத்த ருத்ராக்ஷம் ஒன்று உட்பட நிறை ஆறு மஞ்சாடியும் இரண்டுமா விலை காசு ஒன்று. கண்டிகை ருத்ராக்ஷம் ஒன்றும் சுரி ஒன்றும் நிறை ஐங்கழஞ்சே மஞ்சாடியம் குன்றி, விலை காசு எட்டு.

திருப்பொற்பூ ஒன்று, பொன் % கழஞ்சே 4 மஞ்சாடியும்

திருக்கைக் காறை ஒன்றுபொன் இரு கழஞ்சு திருக்கைக் காறை ஒன்று பொன் 1 % கழஞ்சு 4 மஞ்சாடி.

பரகேசரி புரத்து நகரத்தார் கொடுத்தது

ருத்ராக்ஷம் பொன்னின் சுரிகட்டிற்று ஒன்றும் நாண்படு கண்ணும் கொக்குவாயும் உட்பட நிறை கழஞ்சே ஏழுமஞ்சாடி. விலை காசு மூன்று.

திருஞானசம்பந்தர் பிரதிமம்

பாதாதி கேசாந்தம் இருபத்திரு விரலே 2 தோரை உயரத்து இரண்டு திருக்கை யுடையராகக் கனமாக எழுந்தருளுவிக்கப் பெற்றது. இவர் எழுந்தருளி நின்ற பத்மம் இருவிரலே இரண்டு தோரை உயரமுடையது. இதனொடும் கூடச் செய்த பீடம் ஒன்பதிற்று விரலே இரண்டு தோரைச் சமசதுரத்து நால்விரல் உயரமுடையது.