பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பேராசிரியர்கா. ம. வேங்கடராமையா

3. திருமுறைகளைச் செப்பேடு செய்வித்தமை

மணவிற் கூத்தன் காலிங்கராயன் தில்லையில் திருமுறைகளைச் செப்பேடு செய்வித்தான். இதனை,

"முத்திறத்தார் ஈசன் முதல்திறத்தைப் பாடியவாறு

ஒத்தமைத்த செப்பேட்டின் உள்ளெழுதி - இத் தலத்தின் எல்லைக் கிரிவாய் இசையெழுதி னான்கூத்தன்

தில்லைச்சிற் றம்பலத்தே சென்று'

என்னும் வெண்பா கூறுகிறது. இதில் பாடியவாறு என்னுஞ் சொற்றொடர் கவனிக்கற்பாலது. சம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியவர்கள் பதிகங்களை எம்முறையில் பாடியருளினார்களோ அம்முறையிலேயே அப்பதிகங்கள் மனவிற் கூத்தனது முயற்சியால் எழுதப் பெற்றன என்று இச்சொற்றொடரால் அறியலாகும்.

எத்தலத்திற்குப்பின் எத்தலத்திற்குச் சமய குரவர் சென்றார்கள் என்றும், அங்குப் பாடிய பதிகங்கள் எவை என்றும், ஆய்ந்து திருவருட்டுனை கொண்டு, பெரிய புராணத்தை எழுதியவர் சேக்கிழார் என்பது யாவரும் அறிந்ததொன்று.

சேக்கிழார் காலத்துக்கு முன்பே பதிகங்கள் பாடிய வரிசை முறை கொண்ட செப்பேடுகள் இருந்தன என்பது இப்பாடலால் உறுதி பெறுமாயின் சேக்கிழார் சுவாமிகளக்கு இச்செப்பேடுகளும் பயன் பட்டிருத்தல் கூடும் என்று கூறலாம்.

ஒத்தமைத்த என்ற சொற்றொடரும் கவனிக்கத்தக்கது. செப்பேடுகள் ஒவ்வொன்றும் ஒரே அளவினதாக இருந்திருத்தல் வேண்டும்; ஒவ்வொரு செப்பேட்டில் ஒவ்வொரு பதிகம் மட்டும் எழுதப்பட்டது போலும் என்று இதனால் கூர்ந்து அறியலாம்.