பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G)fr、 g。女rfr。 f : 7 எங்கே என்றுகூடத் தெரியவில்லை. 'கல் சிரிக்கிறது!’ இன்ஸ்பெக்டர் விழித்தார். 'கல் சிரிப்பதைத் தெய்வம் சிரிப்பதாக எண்ணிக் கொண்டு, அந்தச் சிரிப்புக்கு நமக்கு இஷ்டமான அர்த்தத்தை வரவழைத்துக்கொண்டு, தெய்வம் கொடுத்த உத்தரவாக நினைத்துக் கொண்டு, காரியத்தில் இறங்கு கிறோம். காரியம் முடிஞ்ச பின், கல் தெய்வமாக மாறி அப்போ தெய்வம் சிரிக்கிறது.' இன்ஸ்பெக்டருக்கு ஒண்ணுமே புரியவில்லை. 'தர்மராஜன், என் ரிப்போர்ட் கம்ப்ளீட் ஆவறதுக்கு உங்களை ஒண்ணு கேக்கணும். அதுக்குத்தான் உங்களை வரவழைச்சது, கோமதி அம்மாளின் பார்ஸல் எங்கே இங்கே நாங்கள் தேடாத இடம் பாக்கி இல்லே.' P. .ே 433 நகர்ந்து உள்ளே வந்து விட்டான். இன்ஸ்பெக்டர் அனுமதிக்கு அவன் காத்திருக்கவில்லை. அவர் பின்னால் நின்றான். "மிஸ்டர் தர்மராஜன், கோமதி அம்மாளின் நகைப் பொட்டலம் எங்கே?' P. C. 433க்குத் தன்னை அடக்கிக் கொள்ள முடிய வில்லை. இழுத்து ஒரு அடி. அடியா, குத்தா?-அவர் தாடையில். தர்மராஜன் நாற்காலியிலிருந்து விழுந்தார். அவரைத் தூக்கி நிற்க வைத்து அதே இடத்தில்? இன்னொன்று. கீழே விழுந்தவருக்கு இப்போ எழுந்து நிற்க முடியவில்லை. உதட்டோரத்தில் சிவப்பு ரிப்பன் புறப்பட்டது. ஏற்கெனவே செழிப்பான அவருடைய வெள்ளை ரோஸ் கலரில் அந்த ரிப்பன் சிவப்பு மோவாயில் வழிகை யில், இருவரும் வசியங் கண்டவராய்ப் பார்த்துக் கொண்டு நின்றனர். ★