உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் 41 நடைமுறையில் வந்தது. பிரகைத் திருத்தி புதுமுறை அமைப்பதற்காக கி.மு.46-ல் மாத்திரம் 415-நாட்கள் கொண்டதாக்கப்பட்டது. அதனால் கி.மு 46 "குழப்ப மான ஆண்டு" என்று பெயர் பெற்றது. பிழை செய்வதற்காகவே குருமார்கள் ஏற்பட்ட னர்போலும் ! ஏனென்றால் நான்கு வருஷத்திற்கு ஒரு முறை என்பதைத் தவறாக அர்த்தம் செய்து மூன்று வருஷத்திற்கு ஒருமுறை ஒருநாள் அதிகப்படியாக சேர்த்தனர். இதனால் காலண்டர் சிறிது பிசகியது. ஜூலியன் காலண்டர்படி 4-வது, 8-வது, 12-வது ஆண்டுகள் 366 - காட்கள் கொண்ட கூடிய ஆண்டுகள். 4வது ஆண்டு கூடிய ஆண்டு என்று அறிவித்தபின், குருமார்கள் தவறாக 4-வது, 5-வது, 6-வது, 7-வது என்று கணக்குப் போட்டு 7-வது ஆண்டிலேயே 366 நாட்கள் உண்டாக்கினர். இந்தப் பிழை கி.மு.8-வரை நிகழ்ந்தது. அகஸ்டஸ் அதிகாரத்தி விருந்தபொழுது, பிழை கண்டுபிடிக்கப்பட்டது. குருமார்கள் ஜூலியன் காலண் டரைவிட 3-நாட்கள் அதிகமாகக் கணக்கிட்டிருந்தனர். எனவே கி.மு. 8-க்குப்பின் வந்த 12 ஆண்டுகள் சாதாரண ஆண்டுகளாக (365-நாட்கள் கொண்டதாக) ஏற்படுத்தப்பட்டன. காலண்டரில் தன் பெயரையும் நுழைத்து, சிறிது மாற்றம் செய்தான் அகஸ்டஸ். ஜூலியஸ் சீசர் பெயரால் வழங்கிய ஜுலை மாதத்திற்கு அடுத்த மாதத்தை ஆகஸ்ட் என்று பெயரிட்டான். ஜூலியன் காலண்டர் கணக்குப்படிஜுலைக்கு அடுத்த மாதத்திற்கு 30-நாட்கள்தா னிருந்தன. ஜூலியஸ் சீசருக்கு தான் எவ்விதத்திலும் குறைந்தவனல்ல என் பதற்காகப் பிப்ரவரியிலிருந்து ஒரு நாளை எடுத்து ஆகஸ்டில் சேர்த்து 31-நாட்களாக்கினான். அதற்கடுத்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களை 30,31,30,31 நாட்களாக்கினான். தற்பொழுதுள்ள காலண்டர் இந்த முறையிலேயே வழங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/41&oldid=1732277" இலிருந்து மீள்விக்கப்பட்டது