பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 100

விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய்! புரையும் நின்னுடை

(சிற்றெண்)


கண்கவர் கதிர்மணி கனலும் சென்னியை
தண் சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை
ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை
வலிமிகு சகடம் மாற்றிய அடியினை

(இடையெண்)


போரவுணர்க் கடந்தோய் நீ
புணர் மருதம் பிளந்தோய் நீ
நீரகிலம் அளந்தோய் நீ
நிழல்திகழும் படையோய் நீ

(அளவெண்)


ஊழி நீ உலகு நீ உருவு நீ அருவு நீ
ஆழி நீ அருளு நீ அறமு நீ மறமு நீ

(தனிச்சொல்)
எனவாங்கு

(கரிதகம்)


அடுதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன்
தொடுகழற் கொடும்பூட் பகட்டெழில் மார்பிற்
கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்
தொன்று முதிர்கட லுலகம் முழுதுடள்

ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே
✽✽✽