பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

பெருதேவபாணி


(தரவு)


அலைகடற் கதிர்முத்தம் அணிவயிரம் அவையணிந்து
மலையுறைமா சுமந்தேந்தும் மணியணைமேல் மகிழ்வெய்தி
ஓசனை சூழ் திருநகருள் உலகொருமூன் றுடனேத்த
ஈசனையாய் இனிதமர்ந்தங் கிருடிகட்கும் இறையவர்க்கும்
அருளறமே அறமாக அயலார்கண் மயலாக
இருளறதன் கெடுத்தியம்பி இருவினை கடிந்திசினோய்!

{தாழிசை)



துன்னாத வினைப்பகையைத் துணிசெய்யும் துணிவினையாய்
இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கும் நினைப்பினால்
இருளில்லா உணர்வென்னும் இலங்கொளியால் எரித்தனையாய்
அருளெல்லாம் அடைத்தெங்கண் அருளுவதுன் அருளாமோ?

மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி அடைத்தோரைக்
கதிபொருதக் கருவரைமேல் கதிர்பொருத முகம்வைத்துக்
கொன்முனைபோல் வினை தீங்கக் குளிர்நிழற்கண் மகிழ்ந்தனிர்
போல்
நின்மினீர் எனவுணர்த்தல் திருமல நின் பெருமையோ?

மனைதுறந்து வனம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல்
வினையறுக்கல் உறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென் றீங்
கருகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ
உலகெல்லாம் உடன்றுறவா உடைமையுநின் உயர்வாமோ

(அராகம்)



அரசரும் அமரரும் அடிநிழல் அமர்தர
மூரசதிர் இமிழிசை முரணிய மொழியினை

(அம்போதரங்கம்)
(பேரெண்)



அணிகிளர் அவிர்மதி அழகெழில் அவிர்சுடர்