பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 104

4.வண்ணக ஒரு போகு

(அராகம்)

அகலிடமும் அமருலகும் அமர்பொருதும் அறந்தோற்றப்
புகலிடநின் குடை நிழலாப் புகுமரணம் பிறிதின்றி
மறத்தோற்று நிறங்கருகி மாற்புகழும் நிறைதளரப்
புறத்தோற்றுக் கழலார்ப்பப் பொருதகளம் வெறிதாக
மண்ணுலகும் மறிகடலும் மாமலையும் நிலைகலங்க
விண்ணுலகம் வியப்பெய்த வெஞ்சமத்துள் அவைத்தனையே
அதனால்,
கனைகடல் உடைதிரை கரைபொரக் கடைந்தனை
முனைவரும் அமரரும் முறைமுறை வந்துநின்
இணைமலர் பலர்புகழ் பயில்வருதார் பண்பினை
மருளுறு துதைகதிர் மணியது
மணிநிற மருளும் நின்குடை
குடையது குளிர்நிழல் அடைகுன
உயிர்களை அளிக்கும் நின்கோல்
கோலது செம்மையிற் குரைகடல் வளாகம்
மாலையும் காலையும் மகிழ்தூங் கின்று.

(பேரெண்)


ஆருயிர்க் கெல்லாம் அமிழ்தின் றமையா
நீரினும் இனிதுநின் அருள்
அருளும் அலைகடலும் ஆயிரண்டும் ஒக்கும்
இருள்கொடிமேற் கொண்டாய் நினைக்கு

(சிற்றென்)



நீரகலம் காத்தோய் நீ நீலவுகம் ஈந்தோய் நீ
போரமர் கடந்தோய் நீ புனையெரிமுன் வேட்டோய் நீ,
ஒற்றைவெண் குடைபோய் நீ கொற்றச்செங் கோலாய் நீ
பாகையந் துறைவனி பரியவர் இறைவனீ.


(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)


பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்ந்து