பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி146

அம்சமாக உள்ளது எள்னவெனில் இந்தப் பாரம்பரியங்களின் இறுதியில் வரும் மிகப்பெரிய அரசனுக்குப் (வேந்தன்) பின்னால் உடனடியாக ஒரு அரசியல் இருண்மை {political darkness) தொடர்வது என்பதுதான். பாண்டியர்களைப் பொருத்தமட்டில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் பின்னால் ஏதும் தெரியவில்லை. சோழ அரசியல் கரிகாலனுக்குப் பிறகு தகவலேதுமில்லை. சில காலத்திற்குப் பின் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்குமிடையிலான உன் தகராறு பற்றிய செய்தி மட்டும் விதி விலக்கு, சேரரிலும்கூட முக்கியத்துவமிக்க அரசர்கள் இருந்துள்ளனர். பரணரால் பாடப்பட்ட செங்குட்டுவன், இரும்பொறைக்குச் சம காலத்தவனாக இருந்திருக்க வேண்டும். எனவே சேரரிலும் கூட கடைசி அரசர்களாகிய செங்குட்டுவனும் யானை கட் சேய் மாந்தரன் சேரல் இரும்பொறையும் முக்கியமானவர்களாக உள்ளனர்." (Drama in Ancient Tamil society,NCBH, 1981 - பக், 169)

என்று கூறுவதன் மூலம் சங்க கால இறுதியில் சேர, சோழ, பாண்டியர் எனப்படும் மூன்று வேந்துருவாக்கங்களும் உச்ச நிலைக்குச் சென்று முக்கிய அரசர்களின் ஆட்சி உருப்பெருவதைச் சுட்டிக் காட்டுகிறார். இந்த வேந்துருவாக்கங்கள் உச்சத்தை எட்டும் போது சங்க காலம் இறுதியெய்துகிறது.

இந்த வேந்துருவாக்கங்களோடு இணைகிற முக்கிய நிகழ்வுகளாகப் பேராசிரியர் சுட்டிக் காட்டுகிற அம்சங்களும் முக்கியமானவை. அவை:

(1) மூன்று முக்கிய அரசுகளும் தமிழகத்தின் மூன்று முக்கிய நதிக்கரைகளில் உருவாயின. இங்கு விவசாய வளர்ச்சியின் முக்கியத்துவம் சங்கப் பாடல்களில் உணர்த்தப்படுகின்றன. (புறம்.35, 184, 186, நற். 226, அய்ங்.29). இந்த மூன்று வேந்துப் பாரம்பரியங் களிலும் தோன்றிவருகிற முக்கிய அரசர்கள் விவசாய வளர்ச்சியோடு தொடர்புபடுத்தப் படுகின்றனர். இதன் விளைவாக நாட்டின் பொருளியல் ஒழுங்கில் மாற்றங்களை இவர்கள் விளைவிக்கின்றனர். எ.டு. கரிகாலன் காவிரிக்குக் கரை எடுத்தாள். என்பது.

(2). கடைசிப் பெருவேந்தர்கள் கரிகாலன் (புறம் 224, பட்டி), நெடுஞ் செழியன் (மதுரை.), இரும்பொறை (பதிற்.74) ஆகிய மூவரும் வேதச் சடங்குகள், வேள்விகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.'

சங்க காலத்தில் இறுதி என்பது மூன்று வேந்துருவாக்கங்களும் உச்சம் பெறும் நிகழ்வோடும் இம் மூவேந்துகள் என்பன விவசாயமயமாக்கலுடனும், ஆரியமயமாக்கலுடனும் இணைந்துள்ளதையும் சுட்டிக் காட்டும் சிவத்தம்பி அவர்கள் இவ்வேந்துகளின் வீழ்ச்சிக்குக் காரணங்களாகக் கீழ்க் கண்டவற்றைச் சுட்டிக் காட்டுவார். அவை:

(1) வலிமையான வாரிசுகள் உருவாகவில்லை .

(2) ஏற்படுத்திய மாற்றங்கள் ஒரு வலிமையான மத்திய அதிகாரம்