மயிலை சீனி வேங்கடசாமி146
என்று கூறுவதன் மூலம் சங்க கால இறுதியில் சேர, சோழ, பாண்டியர் எனப்படும் மூன்று வேந்துருவாக்கங்களும் உச்ச நிலைக்குச் சென்று முக்கிய அரசர்களின் ஆட்சி உருப்பெருவதைச் சுட்டிக் காட்டுகிறார். இந்த வேந்துருவாக்கங்கள் உச்சத்தை எட்டும் போது சங்க காலம் இறுதியெய்துகிறது.
- இந்த வேந்துருவாக்கங்களோடு இணைகிற முக்கிய நிகழ்வுகளாகப் பேராசிரியர் சுட்டிக் காட்டுகிற அம்சங்களும் முக்கியமானவை. அவை:
(1) மூன்று முக்கிய அரசுகளும் தமிழகத்தின் மூன்று முக்கிய நதிக்கரைகளில் உருவாயின. இங்கு விவசாய வளர்ச்சியின் முக்கியத்துவம் சங்கப் பாடல்களில் உணர்த்தப்படுகின்றன. (புறம்.35, 184, 186, நற். 226, அய்ங்.29). இந்த மூன்று வேந்துப் பாரம்பரியங் களிலும் தோன்றிவருகிற முக்கிய அரசர்கள் விவசாய வளர்ச்சியோடு தொடர்புபடுத்தப் படுகின்றனர். இதன் விளைவாக நாட்டின் பொருளியல் ஒழுங்கில் மாற்றங்களை இவர்கள் விளைவிக்கின்றனர். எ.டு. கரிகாலன் காவிரிக்குக் கரை எடுத்தாள். என்பது.
(2). கடைசிப் பெருவேந்தர்கள் கரிகாலன் (புறம் 224, பட்டி), நெடுஞ் செழியன் (மதுரை.), இரும்பொறை (பதிற்.74) ஆகிய மூவரும் வேதச் சடங்குகள், வேள்விகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.'சங்க காலத்தில் இறுதி என்பது மூன்று வேந்துருவாக்கங்களும் உச்சம் பெறும் நிகழ்வோடும் இம் மூவேந்துகள் என்பன விவசாயமயமாக்கலுடனும், ஆரியமயமாக்கலுடனும் இணைந்துள்ளதையும் சுட்டிக் காட்டும் சிவத்தம்பி அவர்கள் இவ்வேந்துகளின் வீழ்ச்சிக்குக் காரணங்களாகக் கீழ்க் கண்டவற்றைச் சுட்டிக் காட்டுவார். அவை:
(1) வலிமையான வாரிசுகள் உருவாகவில்லை .
(2) ஏற்படுத்திய மாற்றங்கள் ஒரு வலிமையான மத்திய அதிகாரம்