பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

புடைதிளைக்கும் குறுநாட்டவர் குலங்கெடுத்தும், கைந் நலத்த களிறுத்திச் செந்திலத்துச் செருவென்றும்” (வரி: 36, 37, 38) - பாண்டியப் பெருமைகள்

"வியன் பறம்பு மேலாமை சென்தெறித்து அழித்தும், ஹிரண்ப கர்ப்பமும் துலாபாரமும் தரணி மிசைப் பல செய்தும் அந்தணர்க்கும் அசக்தர்க்கும் வந்தணைக என்றீத்தவித்த" (வரி 43, 44, 45) - பாண்டியப் பெருமைகள்

"அறைகடல் வளாகம் பொதுமொழி அகற்றி" (வரி 11) - பாண்டியப் பெருமை

"எண்ணிறந்தன கோசசுகிரமும் இரணியகர்ப்பமும் துலாபாரமும் மண்ணின் மிசைப் பல செய்து மறை நாவினோர் குறை தீர்த்து, கூடல், வஞ்சி, கோழி, என்றும் மாடாமதில் புதுக்கி" (வரி 80, 81, 83,) அரசாண்டவர் பாண்டியன்

"கலியரசன் வலிதளரப் பொலிவினோடு வீற்றிருந்தான் (வரி 89)பாண்டியர்

"ஆய்வேளையும் குறும்பரையும் அடலமருள் அழித்தோட்டிக் காட்டுக் குறும்பு சென்றடைய நாட்டுக் குறும்பிற் செறுவென்று..." (வரி 96, 97)- அரசாண்ட பாண்டியர்.

“வேள்விக்குடி எனப்பட்டது கேள்வியிற் தரப்பட்டதனைத் துளக்கமில்லாக் கடற் தானையாய் களப்ரராலிறக்கப்பட்டது" (வரி119, 120). (அழுத்தங்கள் அனைத்தும் நமது)

இவ்வரிகளில் பலவற்றிற்கு விரிந்த விளக்கம் தேவையில்லை. பாசன விவசாயம் சாராத பல்வேறு குழுக்களை வென்றழித்து அவரது நிலங்களைக் கைப்பற்றியவர்கள் என்றும், இரண்ய கர்ப்பமும் துலாபாரமும் மண்ணின் மிசைப் பல செய்து, மறை தாவினோராகியப் பார்ப்பனர்களின் குறை தீர்த்தவர்கள் என்றும் பாண்டிய மன்னர்கள் போற்றப்படுகின்றனர். இது குறித்து எந்த விளக்கங்களையும் அருணாசலம் அளிக்க முயலவில்லை . வேங்கடசாமியும் இவற்றை ஒதுங்கிச் சென்று விட்டார். சிவத்தம்பி, ஸ்டெய்ன் ஆகியோர் சுட்டிக் காட்டிய தரவுகளைப் பரிசீலித்த நம்மால் அப்படிச் செய்ய இயலவில்லை.

வேள்விக்குடிச் சாசனத்தில் மிக முக்கியமாகக் கவனம் குவிக்க வேண்டிய ஒரு சொல் பொது (வரிகள் 24 மற்றும் 54.) "மகீதலம் பொது நீக்கியும், "அறைகடல் வளாகம் பொது மொழி அகற்றி"யும் அரசாண்டவர் பாண்டியர் என்கிறது சாசனம். விவசாயம் சாராத மக்கட் குழுக்களை வென்றதோடன்றி அங்கு நிலவிய பொது நிலையை நீக்கியும் அங்கு வழக்கத்திலிருந்த பொது என்கிற மொழியை (discourse) அகற்றியும் பாண்டியர் அரசாண்டனர் என்பது குறிப்பு. பொது என்பதன் மூலம் சாசனம் என்ள சொல்லவருகிறது? சாசனத்தை ஆதாரமாகக் கொண்ட யாரும் இதுவரை அதனை விளக்கினாரில்லை . '

மலைசார்ந்த மற்றும் பாசன வசதியற்ற நிலங்களில் வசித்த மக்கட் தொகுதியினர் மத்தியில் புழக்கத்திலிருந்த இருக்கிற சாகுபடி முறையே