பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

மருவினிய வொருமகனாகி மண்மகனை மறுக்கடித்து
விக்ரமத்தின் வெனிற்பட்டு விலங்கல் வெல்பொறி

வேந்தர் வேந்தன் 30

சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் '

செங்கோற்சேந்தன்;

மற்றவற்குப் பழிப்பின்றி வழித்தோன்றி
உதயகிரி மத்ய மத் துதுசுடர்போலத்
தெற்றென்று திசை நடுங்க மற்றவன் வெனிற்பட்டுச்
சூழியாளை செலவுத்திப் பாழிவா யமர் கடந்து
வில்வேலிக் கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும்
விரவிவத் தடையாத பரவரைப் பாழ்படுத்தும்
அறுகாலினம் புடைதிளைக்குங் குறுநாட்டவர் குலங்கெடுத்தும் :
கைந்தலத்த களிறுத்திச் செந்நிலத்துச் செருவென்றும்
பாரளவுத் தனிச்செங்கோற் கேரளனைப் பலமுறையும்
உரிமைச் சுற்றமோ டவர்யாளையும் 40
புரிசைம்மதிற் புலியூர்ப்
பகல் நாழிகை யிறவாமை இகலாழியுள் வென்று கொண்டும்
வேலாழியும் வியன்பறம்பு மேலாமைசென் றெறிந்தழித்தும்
ஹிரண்யகர்ப்ப முந் துலாபார முந் தரணிமிசைப் பலசெய்தும்
அந்தணர்க்கு மசக்தர்க்கும் வந்தணைகஎன் றீத்தளித்த
மகரிகையணி மணிநெடுமுடி
அரிகேசரி யசமசமன் சிரீமாறவர்ம்மன்;
மற்றவற்கு மகனாகிக் கொற்றவேல் வலனேத்திப்
பொருதூருங் கடற்றானையை மருதூருண் மாண்பழித்
தாய்வேளை யகப்பட ஏயெள்ளாமை பெறித்தழித்துச் 50
செங்கொடியும் புதான்கோட்டுஞ் செருவென்றவர் சினந்தவிர்த்துக்
கொங்கலரு தறும்பொழில்வாய்க் குயிலோடு மயிலகவும்
மங்கலபுரமெனு மகாதகருண் மகாரதரையெறிந்தழித்து
அறைகடல் வளாகம் பொதுமொழி யகற்றிச்
சிலையும் புலியுங் கயலுஞ் சென்று
நிலையமை நெடுவரை யிடவயிற் கிடா அய்
மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோற்
றென்ன வானவன் செம்பியன் சோழன்
மன்னர் மன்னன் மதுரகரு நாடகன்
கொன்னலின்ற நெடுஞ்சுடர் வேற் கொங்கர்கோமான் கோச்சடையன்; 60
மற்றவற்குப் புத்ரளாய் மண்மகளது பொருட்டாக
மத்தயானை செலவுத்தி மானவேல் வலனேந்திக்
கடுவிசையா லெதிர்ந்தவரை தெடுவயல்வாய் நிகரழித்துக்
கறுவடைந்த மனத்தவரைக் குறுமடைவாய்க் கூர்ப்பழித்து
மன்னிகுறிச்சியுந் திருமங்கையு முன்னின்றவர் முரணழித்து
மேவலோர் கடற்றானையோ டேற்றெதிரே வந்தவரைப்