பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 160

பூவலூர்ப் புறங்கண்டும்
கொடும்புரிதை நெடுங்கிடங்கிற் கொடும்பாளூர்க்கூடார் (தம்)
கடும்பரியுங் கடுங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும்
செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூருட் டேசழிய
எண்ணிறந்த மால்களிறு மிவுளிகளும் பலகவர்ந்தும்
தரியலராய்த் தறித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும்
பூலிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்
டழகமைந்த வார்சிலையின் மழகொங்க மடிப்படுத்தும்
ஈண்டொளிய மணியிமைக்கு மெழிலமைந்த நெடும்புரிசைப்
பாண்டிக் கொடுமுடி சென்றெய்திப்
பசுபதியது பதுமபாதம் பணிந்தேத்திக்
கனகராசியும் கதிர்மணியும் மனமகிழக் கொடுத்திட்டுங்
கொங்கர்வன் தறுங்கண்ணிக் கங்கராஜனொடு சம்பந்தஞ்செய்தும் எண்ணிறத்தன கோசகசிரமும் இரணியகர்ப்பமுந் துலாபாரமும் 80
மண்ணின் மிசைப் பலசெய்து மறைதாவினோர் குறைதீர்த்துங் கூடல்வஞ்சி கோழியென்லு மாடமா மதில் புதுக்கியும்
அறைகடல் வளாகங் குறையா தாண்ட
மன்னர் மன்னன் றென்னவர் மருகன்
மான வெண்குடை மான்றேர் மாறன்;
மற்றவற்குமகனாகி மாலுருவின் வெளிர்ப்பட்டுக் கொற்றமுன்றுடனியம்பக் குணீர்வெண்குடை மண்காப்ப பூ
மகளும் புலமகளு நாமகளு நலனேத்தக்
கலியரைசன் வலிதளரப் பொலிவினொடு வீற்றிருந்து
கருங்கட லுடுத்த பெருங்கண் ஞாலத்து
நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக்
கருதாதுவத் தெதிர்மலைந்த காடவனைக் காடடையப்
பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் றென்கரைமேல்
தண்ணாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத் தமர்வென்றும்
தீவா யயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த
ஆய்வேளையுங் குறும்பரையு மடலமரு ளழித்தோட்டிக்
காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குதும்பிற் செருவென்றும்
அறைகடல் வளாக மொருமொழிக் கொளீஇய சி
லைமலி தடக்கைத் தென்ன வானவன்
அவனே, 100
சிரீவரன் சிரீமனோகரன் சினச்சோழன் புனப்பூமியின்
வீதகன் மஷன் விநயலிச்ருதன் விக்ரமபாரகள் வீரபுரோகன்
மருத்பலன் மான்பசாசனன் மதுபமன் மர்த்திதவீரன்
கிரிஸ்திரன் திகிந்தரன் கிரிபாலயன் கிருதாபதாவன் கலிப்பகை கண்டகதிஷ்டூரன் கார்யதவன் கார்முகபார்த்தன் பராந்தகன் பண்டிதவத்ஸலன் பரிபூர்ண்ணன் பாபபீரு
குரையுறுகடற் படைத்தானைக் குணக்ராஷ்யன் கூடந்ருணயன்