பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

நிறையுறுமலர் மணிநீண்முடி தேரியர்கோன் னெடுஞ்சடையன்; மற்றவன்றன் ராஜ்யவற்சரம் மூன்றாவது செலாநிற்ப;
ஆங்கொருதாண்
மாடமா மதிற்கூடற் பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக்
கொற்றவனே மற்றவரைத் தெற்றென நன்குகூவி
என்னேறுங் குறையென்று முன்னாகப் பணித்தருள
மேனாணின் குரவராற் பான்முறையின் வழுவாமை
மாகந்தோய் மலர்ச்சோலைப் பாகனூர்க் கூற்றத்துப்படுவது
ஆள்வதானை யடல்வேந்தே வேள்விகுடியென்றும் பெயருடையது
ஒல்காத வேற்றானையொ டோதவேலி யுடன் காத்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்றும் பரமேச்வரனால்
வேள்விகுடி யென்னப்பட்டது கேள்வியிற் றரப்பட்டதனைத்
துளக்கமில்லாக் கடற்றானையாய் களப்ரரா லிறக்கப்பட்டது 120
என்று தின்றவன் விக்ஞாப்பஞ்செய்ய, நன்றுநன்றென்று முறுவலித்து நாட்டானின் பழமையாதய் காட்டித் கொள்கவென்ன
நாட்டற்றான் பழமையாதல் காட்டினானங் கப்பொழுதே
காட்டமேனா ளெங்குரவராற் பான்முறையிற் றரப்பட்டதை
எம்மாலுந் தரப்பட்டதென்று செம்மாந்தவ னெடுத்தருளி
விற்கைத்தடக்கை விறல் வேந்தன் கொற்கை கிழான்
காமக்காணி நற்சிங்கற்குத்
தேரோடுங் கடற்றானையான் நீரோடட்டிக் கொடுத்தமையின்; மற்றிதற்குப் பெருநாள் கெல்லை தெற்றென விரித்துரைப்பிற்-
புகரறு பொழின் மருங்குடுத்த நகரூரெல்லைக்கு மேற்கும்; 130
மற்றிதற்குத் தென் எல்லை குளந்தைவங்கூழ் வத்தெசைக்குங்
களந்தைக் குளத்தி லாலுக்கு வடக்கும்;
மற்றிதற்கு மேலெல்லை
அற்றமில்லாக் கொற்றன் புத்தூரொடு
மையிருப்பைச் செய்யிடை மேற்றலைப் பெருப்பிற்குக் கிழக்கும்;
மற்றிதற்கு வடபாலெல்லை
காயலுட், கமலமலரும்ம பாயலுள் வடபாலைப் பெருப்பிற்குத் தெற்கும்;
இவ்வியைத்த பெருநான் கெல்லையிற்
பட்டபூமி காராண்மை மீயாட்சி யுள்ளடங்க
மேலென் குரவராற் கொடுக்கப்பட்ட பரிசே
யெம்மாலும் கொடுக்கப்பட்டது;
மற்றிதற் காணத்தி குற்றமின்றிக் கூறுங்காலைக்
கொங்கர்வன் நறுங்கண்ணிக் கங்கராசனது கந்யாரத்தம்
கொங்கர் கோற்குக் கொணர்ந்து கொடுப்ப
ஆர்ப்பறா வடற்றானைப் பூர்வராசர் புகன்றெழுந்து
வில்லிரவுங் கடற்றானை வல்லபனை வெண்பைவாய்
ஆளமரு வழிந்தோட வாளமரு ளுடன்வவ்விய
ஏனப்பொறி யிகலமரு ளிடியுருமென வலனேந்த