பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

சிவபெருமான் திருவந்தாதி

பரணதேவ நாயனார் இயற்றியது சிவபெருமான் திருவந்தாதி. இது நூறு வெண்பாக்களினால் அந்தாதித் தொடையாகப் பாடப்பட்டுள்ளது. பதினோராந்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வந்தாதியின் கடைசியில் இதன் சிறப்பைக் கூறுகிற வெண்பா ஒன்று காணப்படுகிறது. இவர் சங்ககாலத்தில் இருந்த பரணர் அல்லர். பக்தி இயக்க காலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்த நக்கீர தேவதாயனார், கல்லாடதேவ நாயனார், கபிலதேவ நாயனாரைப் போலவே இந்தப் பரணதேவதாயனாரும் பிற்காலத்தில் இருந்தவர்.

சங்க காலத்துப் பரணர் அகநானுற்றில் 34 செய்யுட்களையும் குறுந்தொகையில் 16 பாடல்களையும் நற்றிணையில் 12 செய்யுட்களையும் புறநானூற்றில் 13 செய்யுட்களையும் பாடியுள்ளார். மற்றும் சேரன் செங்குட்டுவன் மேல் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தைப் பாடினார். சோழன் உருவப் பஃறேரிளஞ் சேட் சென்னியையும் வையாவிக் கோட்பெரும் பேகனையும் பாடியுள்ளார். அவர் கி.பி.2-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடைச்சங்க காலத்தில் இருந்தவர். சிவபெருமான் திருவந்தாதி பாடிய இந்தப் பரணதேவ நாயனார் பிற்காலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர். இவர் வேறு அவர் வேறு.

கீழ்க்கணக்கு நூல்கள்

இதுவரையில் களப்பிரர் காலத்தில் சைவ சமண சமயத்தவர் எழுதிய தமிழ் நூல்களைக் கூறினோம். களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட வேறு நூல்களும் உள்ளன. அவை கீழ்க்கணக்கு நூல்கள். கீழ்க்கணக்கு நூல்களைப் பதினெட்டாகப் பிற்காலத்தில் தொகுத்துள்ளனர். பதினெட்டு கீழ்க்கணக்கு தூல்களில் காலத்தால் முற்பட்டவையும் பிற்பட்டவையும் உள்ளன. ஆனால், அவைகளில் பெரும்பான்மையானவை களப்பிரர் ஆட்சிக் காலத்துக்குள்ளாக எழுதப்பட்டவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாவன:- 1.நாலடியார் 2. நான்மணிக்கடிகை 3, இன்னாநாற்பது 4. இனியவை நாற்பது 5.கார்நாற்பது 6.களவழி நாற்பது 7.ஐந்திணை ஐம்பது 8. திணைமாலை நூற்றைம்பது 9.திணைமாலை ஐம்பது 10.திணை மொழி ஐம்பது 11. ஐந்திணை எழுபது 12. முப்பால் (திருக்குறள்) 13. திரிகடுகம் 14. ஆசாரக்கோவை 15 சிறுபஞ்ச மூலம் 16. முதுமொழிக் காஞ்சி 17. ஏலாதி 18.கைந்நிலை.

இந்தக் கீழ்க்கணக்குப் பதினெட்டு நூல்களில் திருக்குறள், களவழிநாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய மூன்றும் கடைச்சங்க காலத்தில் கி.பி.250-க்கு முன்பு எழுதப்பட்ட நூல்கள். நாலடியார் என்னும் நூல் கி.பி. 7-ம் நூற்றாண்டில், களப்பிரர் ஆட்சிக்குச் சற்று பின்பு எழுதப்பட்டது. பிற பதினான்கு நூல்களும் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் கி.பி.3-ம் நூற்றாண்டுக்கும் 6-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் போன்ற சிலர் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் எல்லாம் கி.பி. 6-நூற்றாண்டு முதல்