பக்கம்:கள்வர் தலைவன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3.) கள்வர் தலைவன் 37 தேடிப் பிடித்து உனக்குத் தருகின்றேன். ஆயினும் ே நான் சொல்லுகிறபடி செய்யவேண்டும். செய்கிறபட்சத் தில் எப்படியும் உனக்கு அதைக் கண்டெடுத்துத் தருகிறேன். அப்படியே செய்கின்றேன், எப்படியாவது நான் பிழைத் தாற் போதும். . ஆனல் நீ இவ்விஷயங்களை யெல்லாம்பற்றி செளரிய குமாரனுடன் ஒன்றும் கூறலாகாது. அவனுக்கு நீ ஒரு தீங்கும் செய்யலாகாது. நான் உனக்கு உத்தரவு கொடுக் கும்வரையில் முன்பிருந்தது போலவே அவனுடன் அன் யோன்யமாயிருப்பதுபோல் நடித்து வரவேண்டும். கான் சீக்கிரம் உனக்கு ஏதாவது எழுதியனுப்புவேன். அதன்படியே செய்யவேண்டும். என் கட்டளையின்படி மாத்திரம் நீ கடந்துவருவாயாயின் உனக்கு எப்படியும் நான் உதவிசெய்கின்றேன். நீ வேண்டியபடி, அப்படியே செய்கின்றேன், நீர் மாத்திரம் என்னுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும். ஆனல் ஏமாங்கத ராஜன் எங்கிருக்கின்ருன் என்று கூறினிர் ? . கான் உனக்கு அதைக் கூறவில்லையே. அவர் உயிருடன் இருக்கிருர் என்றுமாத்திரம் கூறின்ேன். அதையேன் கேட்கின்ருய்? உமக்கொன்றும் தெரியாது அப்பாதகன் செளரியகுமா ரனுடைய வேலே யெல்லாம். இப்பொழுது அவர் தாம காரண்யத்திற்ருன் ஒளித்திருப்பாரென்றும் அங்கு போய் எப்படியாவது அவரைக் கொன்று விட்டே வர் வேண்டுமென்றும் இரண்டு கொலேயாளிகளே ஏவியிருக் கின்ருன். அவர்கள் அவ்வேலைக்காகப் புறப்பட்டு விட் டார்கள். என்னுடைய வேலேக்காரன் சற்றுமுன்பாகக் கூறியதைக் கேட்கவில்லையா தாம்? . அப்படியா சமாசாரம் ? ஐயோ!-அப்பா பலாயன ! சிநேகிதன் என்றும் பாராமல் உனக்கு விஷம் கொடுத் திருக்கின்ற செளரியகுமாரனைத் தண்டித்து ஏமாங்கத ராஜனுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று உனக்கு உண் மையில் இஷ்டமிருக்குமாயின் உடனே ஏமாங்கதருக்கு இக்கொலையாளிகளின் விவரத்தையெல்லாம் கூறி ஜாக் கிரதையாயிருக்கும்படியாக ஒரு கிருபமெழுதி என்னிடம் கொடு. கான் அதை அவாக்குக் கொடுக்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/31&oldid=779735" இலிருந்து மீள்விக்கப்பட்டது