பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

திகள், கவணகள், ஊசிகள்- நண்பர்கள், சுற்றத்தாரிட மிருந்து வந்த வண்ணம்தான். உத்தியோகத் 5 வந்தவுடனே பதிவு செய்தபின் அடுத்த வாரத்துக்குள். அதனதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாவிட்டால், சிலசில அதனதன் தரத்துக்குக்கேற்ப, விசுவருபமெடுத்து விடும்,

{} {} {!

இது உங்களுக்கு என் கைப்பட எழுதும் நான்காவது ம. 0. இன்னமும் மேல் குறிப்பிட்ட ஸ்டேட்மெண்ட், உங்கள் ஆபீஸ் அனுப்பிய பாடில்லை. இன்னும் தாமத மானால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாவீர் என்று வருத்தத்துடன்......

. { 

நான்கு கடிதங்கள் எழுதியும், என் டிபாஸிட் தொகை மீது வட்டி, குறைவாகத் தப்புக் கணக்குப் பண்ணியிருக் கீங்க விளக்கமும் தரல்லே. குறைத் தொகையையும் எனக்கு வரவு வெக்கல்லே...மரியாதைக்கு ஒரு வரி பதில் போடாட்டி என்ன அர்த்தம் எங்கறேன். உங்கள் ஹெட்டு ஆபீசுக்குப் புகார் செய்வதுடன் என் கணக்கை வேறி டத்துக்கு மாத்திக்கிட வேண்டியதுதான். ஆனால் எங்கே போனாலும் என்ன வாழுது? அந்தத் துணிச்சல்தானே உங்களுக்கு? கணக்கு வெக்கிற வரைக்கும் எட்டுத்தடவை படியேறி வந்து பிரானனை வாங்கறீங்க. கணக்கு வச்சா இந்தப் பாடுதான்......”

பையன் BA பாஸ் பண்ணி விட்டு ஒரு வருடமா சும்மாயிருக்கிறான். i க்ளாஸ்தான். நன்றாய்ப்படிப் பவன்தான். அவனைச் சொல்லிக்குத்தமில்லை. அதுவும் என் ஏப்ராசிதான். இதைச் சாதிப்பதற்குள் எனக்கு முழி பிதுங்கிப் போயிற்று. அவள் கழுத்தில் வெறும் மஞ்சளைக் கோர்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறாள். இருபது வருடம் வாழ்ந்தவனுமில்லை. இரு ப து வ ரு ட ம்