பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இா, ச. ரா.

இருங்கள். எல்லாம் போட்டது போட்டபடிக் கிடக்கு emergency. Over time Gaw.”

இருவருக்கும் முகம் ஒரு முழம் விழுந்தது. இரட்டையர்,

டாக்ஸி கிளம்பி இருவரும் சற்று நேரம் மெளனமாக இருந்தோம். நான் என் மூலையில் ஒடுங்கிக் கிட ந்தேன். இதுவரை எங்கே ஏறியிருக்கிறேன்? வெண்ணெய்மேல் வழுக்கற மாதிரி. இதுபோலும் ஒரு சுகம் இருக்கா? இத் தோடு, காதுக்கே கேட்காத ஒத்துமாதிரி கும்” முஇ ஒரு சுருதி.

“அம்பி, உன் பேச்சை நம்பி ஒரு பெரிய சூதாட்டத் தில் இறங்கியாச்சு. இது வெடிச்சுதுன்னா, யார் யாருக்கு மொக்கு மோறை எப்படி உடையப் போறதோ என்னை யும் சேர்த்து? யார் பணம் எடுத்ததுக்கும் நீதான் சாகதி. இப்போ கேள்விகள். நீ பதில் சொல்ல வேண்டாம். ஆனால் கேள்விகள்.

மூனாம் மனுஷன் நீ, வங்கி அலுவல் நேரம் தாண்டி, வங்கியில் உனக்கென்ன வேலை?

முத்தையாவும் நீயும் உள்கையாவோ அல்லது முத்தை யாவுக்குத் தெரியாமலே நீ மட்டுமோவோ, அவன் நோட் டுத் தைக்கும் போதோ, சிவராமனுக்கும் விசுவத்துக்கும் காப்பி வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கும் சர்க்கில். பேச்சுக்கு - இல்லை, ரெஜிஸ்தர் ஏதாவது அவர்களுக்கு கொண் டு வந்து கொடுக்கும் சா க் இல் ட இல்லை. பேனாவுக்கு மசி ஊற்றுகிறேன் சாக்கில்- எத்தனை யோவில் இதுவும் ஒன்று, எல்லாரும் “அலால்ட்டா’ விருக்கும் சமயம் பார்த்து, அதுதான்ே உங்கள் பாஷை, உன் கை ஜாலக் கை ஏன் காண்பித்திருக்க முடியாது? உன்னைப்பற்றி யாருக்கு என்ன தெரியும்? உண்மையில் முத்தையாவுத்குத் தெரியுமா?