பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 115 எனக்கு நடுமுதுகு சில்லிட்டது. என் முட்டாள்தனம் என் வாய் எக்கேடு கெட்டுப் போகட்டும்னு ஏன் எனக்குக் கொடுத்த வேலை பாஸ்புக் எழுதுவதோடு நிற்கவில்லை? இன்றிரவு நான் போலிஸ் லாக்கப் பிலா ?

- ‘என்னைச் சோதித்துப் பார்த்துக் கொள் என் பாய் நீ எடுத்திருந்தால், பணம் உன் உடம்பிலேயே இன்னும் இருக்க உன் உடம்பு என்ன அவ்வளவு முட்டாளா? எந்த ஜலதாரையிலோ, பெருச்சாளிப் பொந்திலோ-இரண்டுக் கும் கட்டிடத்தில் குறைவில்லை. -

அடுத்து முத்தையா, காஷைக் காய்கறிக் கூடை துக்கி னது பெரிய தப்பு. ஏசல் உடைசல் தப்பு இல்லை. மஹா மஹாதப்பு இது. அம்பலமானால் யார் யாரை எப்படி மாட்டி விடுமோ? நோட்டுக்கத்தை நழுவித் தற்செயலாக என் கீழே விழுந்திருக்கக் கூடாது? இருட்டில் இசை கேடாய், கண்ணுக்குச் சட்டென்று படாமல் இன்னும் விழுந்த இடத்திலேயே கிடக்கலாம். எலி, இதற்குள் இழுத்துக் கொண்டும் போயிருக்கலாம். இதுவும் தற்செய லாக நேர்ந்ததா? திட்டம் போட்டு நடந்ததா? விசார ணைக்குரிய விஷயம். அக்கா மகன் நீ மேடையில் தோன்றி யிருப்பதால் சந்தேகம் இன்னும் பலம்.

Cash Baiance Ragister # s ai Gpai smau#3# #fra; வழக்கம் போல் ஒரு கண் மூடிக் கையெழுத்துப் போட் டது என் தப்பு. ரொக்கத்தை என் கைப்பட நான் எண்ணி Test Check ஏனும் பண்ணி, நான் கீழே துணை போய் Stock Room இல் Safe இல் வைக்கும்வரை உடன்காவல் என் கடமை. நான் மேலே தங்கி விட்டேன். உடம்பு என்றால் தாத்தன் ஒத்துப்பானா? வேலையை விட்டுப் போ. அல்ல, செத்துப்போ’ நியாயமும் அதுதானே!

காசி எப்படியெல்லாம் மாட்டிக்கறான் போன மாதம்தான் ஒரு over payment அவனுக்கு இப்போ ‘வளை சரியாயில்லை. இதோ முத்தையா வாசலில் நிக்க றான். இறங்கு. நீ என்னோடேயே இரு, நீயா வாயைத்