பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 35

குளித்தவளை என் செய்வது? முழு நிர்வாணத்தில் கூட அவள் ஜ்வாலைதான்.

தவஸ்வினி. அமானுஷ்யை. கங்கா பாலா. ஜ்வாலா பாலா. கங்கையைச் சிவன் தாங்கியதுபோல் நான்- நான்

கன்னங்களடியில் குலுகுலுக்கிறது. தழலை ஏந்த நான் சிவனா? எனக்குக் காதல் பிறந்து விட்டதா?’ இ-ல்-லை அடித்துச் சொல்விக் கொள்ள முடியவில்லை. ஒரு இன்பக் குழப்பம் தெரியாமல் நrத்ரத்தை விழுங்கி விட்டு அது உள்ளே மினுக் மினுக்’ ஒடி விளையாடுவது தாங்க முடியவில்லை.

எண்ணம் பட்ட பின்தான் அதன் துணிச்சல் தெரிந்தது. உணர்வில் தோய்ந்ததும் திகில் வந்தது. நrத்ரம் உள்ளே பொசுக்

இல்லை- பொசுக் மினுக் பொசுக் மினுக்’ “பொசுக் மினுக்’

‘அம்பி, இந்தத் தோப்பை வாங்கிக்கறியா?” வெளிக் குரல் உள் புகைச்சலைக் கலைத்தது. என்ன உளர்றான்

அவன் என்னை முகம் நிமிர்ந்து பார்க்கவில்லை. கயிறைத் திரித்துக் கொண்டே,

‘இந்த ரெண்டு வருசத்துலே உன் கணக்கிலே எட்டாயிரம் தொடாமே கிடக்குதே!”

எனக்குக் கோபம் வந்தது அடக்கிக் கொண்டேன். ஒருத்தன் கணக்கை ஒருததன் பார்ப்பது (கடன் வாங்க வழியிருக்கிறதா) சிப்பந்திகளிடையே சகஜம்தான். அதென்னவோ சம்பளப் பட்டியலில் ஒவ்வொருத்த னுக்கும் சம்பளத்துக்குக் குறைச்சல் இல்லை. ஆனால்