fr r,
- Well, l am not sorry. எனக்கு எங்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?
- Good Huck'’
to d 3
தென்னந் தோப்பில் கட்டிவில் உட்கார்ந்திருக் கிறேன்.
கவலை ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கிறது. முத் தையா ஏற்பாடு பண்ணி விட்டுப் போயிருக்கிறான்.
சால் கவிழ்ந்ததும் ஜலம் சுழித்து ஜிலுஜிலு குலு குலு கிலுகிலு கால்வாய்களில் சுருதியிழைக்கின்றது.
நான் போன பிறகு இந்த உலகத்தின் ஏலத்துக்கு உன் நிலையில் உன்னை விட்டுவைப்பதைவிட, நீ என் னோடு வந்துவிடுவது மேல் என்று அவளிடம் சொல்லி யிருப்பாரா?
இல்லை அப்பாவின் உடல் நிலையை அவளே தெரிந்து கொண்டு ஏதோ வெறியில் முடிவு பண்ணிவிட் டாளா?
‘ஒருவருக்கொருவர் துணைக்குக் கூட வழியில்லாமல் இருவருக்குமே இங்கே என்ன வேலை?
அத்தனை மாத்திரைகளையும் தானாவே எப்படி விழுங்கியிருக்க முடியும்? சம்மதமில்லாமல்? பலவந்தமாக ஊட்டியிருப்பாரா? இல்லை யோசனை தந்ததே அவளா யிருக்குமா?
இது ஒரு கொலையும், ஒரு தற்கொலையுமா, அல்ல தற்கொலை ஒப்பந்தமா ? இருவருமே சிதையோடு கொண்டு போய்விட்ட ரகஸ்யம்,
இந்தக் குருட்டுயோசனையால். யாருக்கு புண்ணியம் அல்லது விமோசனம்?