இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ലര്യാദ്രു ുrറ്റ്
ஏதிலியென் னோடு, ஓர் எருது துணையாக
வந்திருந்த தத்துணைக்கும்
வாய்க்கரிசி போட்டவள், நான்!
நொந்திருந்த என்னைத்தான்
நுங்கள் விலங்கரசர் காத்துக் கரைசேர்த்துக்
காதாரப் பாராட்டிச் 1155 சித்துப்பூத் தென்று, இச்
சிறியவளைத் தன் அமைச்சாய்க் கொண்டையத்தில் தூக்கிக்
குந்தவைத்து விட்டார்கள்!
பண்டைப் பழம்பிறப்பு
பாதியிலே தீர்ந்துபோய்ப் புத்தம் புதுப்பிறப்பாய்
வந்து புலர்ந்து விட்டேன்! நித்தமினி உங்களுடன் -
நேயப் புதுவாழ்க்கை 1160 வாழ்வதற்கே எண்ணி விட்டேன்!
நம்மின் வருங்காலம் தாழ்வின்றிப் போகும், இனி!
தாழ்ச்சியுற மாட்டோம், நாம்!
காட்டு விலங்கினமே
என்றாலும் கற்றுயர்ந்த
நாட்டுமக்கள் தம்மிலும்நாம்
நல்லஇனம், நல்ல மனம்,
廿7