இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ലാഭു ിലന്തൂ
வல்லரிமா வாழ்கவென
வன்குரலில் வாழ்த்தியபின்,
மெல்லெழுந்து நின்றேதன் மேனி சிலிர்த்ததுவாய்
ஆங்கிருந்த மாக்கள்முன்
'அன்பர்காள்! நம்மரசர்
நீங்கவிலா அன்பாலென்
நீள்வருத்தம் போக்கிவிட்டார்!
போக்கியது மன்றிப் -
புதுப்பொறுப்பை யும்,தந்தே 1635
ஊக்கியும்விட் டார், என்னை! உங்கட் குழைத்திடவும்
கட்டளையும் தந்துயர்ந்தார்!
காலமெல்லாம் நன்றிசொல்வேன்!
பெட்டைக் கழுதைக்குப்
பேரமைச்சு தந்தவர்க்கு
நல்கடமை யாற்றுதலே
நான்செய்யத் தக்கதுவாம்!
வெல்கநம் காட்டின்
விலங்குகளின் நல்லரசு! j640 இன்றுமுதல் ஆட்சி
இனிதே தொடங்கட்டும்! ஒன்றுசெய்ய வேண்டும்,நான்!
உங்களிலே சிற்சிலர்க்கு
155