பக்கம்:கழுதை அழுத கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാണ്ടൂ ു്യി

வான வெளியில்

வளைந்தபடி மேல்கீழாய் 15 ஆனபடி யெல்லாம்

அலைந்தலைந்து நீ பறந்து, வெள்ளை முகிலுள்

புகுந்து விளையாடித் துள்ளும் அருவியிலே

தோய்ந்து குளித்தெழுந்து, பூந்தேனை மாந்திப்

புதுக்கனிகள் பார்த்துண்டு, காந்தும் இளமையெழும் -

கன்னிப் பருவத்து, ஒர் 20 ஆண்பறவை கண்டே

அளாவி மணஞ்செய்து வான்தோயும் கூடுகட்டி

முட்டையிட்டு வாழ்ந்திருந்து குஞ்சு பல பெற்றுக்

குலந்தழைக்க வாழ்ந்திருப்பாய்! கொஞ்சமன்று இன்பம்!

கொடிகொடியாய்ப் பூத்திருக்கும்.

செஞ்சொல் கிளியாய்,

சிறுகுருவி, வெண்புறவாய், 25 அஞ்சொல் குயிலாய்,

அழகு மயிலுருவாய், காடையாய், வெண்கொக்காய்,

காட்டு மணிப்புறவாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/44&oldid=665385" இலிருந்து மீள்விக்கப்பட்டது