இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാണ്ടൂ ിലന്തൂത്
குத்திட்டு நிற்கும்
திமிலழகும், கொம்பழகும்! 260 எத்திக்கும் உங்கள்
எழிலை வியந்துரைப்பார்!
காளை அரசே!
கழுதை வணங்குகின்றேன்.
வேளை சரியோ,
சரியிலையோ நானறியேன்.-"
- என்று நயமாய்
இரும்புளமும் வெண்மெழுகாய் நின்றுருகி நீராய் .
நிலைகுலைந்து போமாறு 265 மென்று விழுங்கி - மொழியைக் குதப்பிற்று!
பெண்கழுதைப் பேச்சு
பெருங்காளை மாட்டுக்குக் கண்கவரும் பச்சைப்
பசும்புல் வெளிபோலும், செங்கரும்பு போலும்,
செறிந்ததொரு கோடையிலே பொங்கும் நுரைத்த
புளிநீர் மணம்போலும், 270 காவிரி நீரில் . . . . . உடல்குளித்த வாறாயும் ஆவி உருகிடவே .
மாலையிலே ஆற்றிடையில்
25