இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ഗ്യഗുണ്ടൂ ു്
வெள்ளையெல்லாம் பாலென்பார் ! வேட்டியெல்லாம் நூலென்பார் !
இத்தகைய மக்கள்தாம் - ஏமாற்றி வாழ்பவர்தாம்,
மெத்தப் பெருமைகளை
மேன்மேல் பெறுகின்றார்!
விண்ணிலுள்ள மீன்களையும்
விரல் விட்டே எண்ணிடலாம் !
மண்ணில் பணஞ்செய்யும்
மாற்றத்தை எண்ணுவதார் ? 550
அப்பணத்தின் ஆட்சிக்(கு)
அரசரிவர் என்சொல்வேன்"
- இப்படிச் சொல்லி,
கழுதை எதிரிலுள்ள காளையினை நோக்கிக்
"கருத்தென்ன?" என்றிடவும், 'பாளை பிளந்ததுபோல்
'உண்மை பகர்ந்துவிட்டாய் !” 555 மாலை நெருங்கிற்று;
மற்றுமுங்கள் ஏகாலி வேலை மூடித்திருப்பான்!
விடுசெல்லல் வேண்டுமன்றோ?" என்றதனைக் கேட்க,
இரண்டு கழுதைகளும் ஒன்றன் முகத்தினை மற்
றொன்றுபார்த் தேங்கினவே!
§:
53