பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கவிக்குயில் சரோஜினியின்

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்பதும், நாட்டுப் பற்றோடு மக்களுக்குத் தொண்டாற்றி, அவர்களை வீறு கொள்ளச் செய்து வீர உணர்வுகளை உருவாக்குவதும், இந்திய சுதந்திரத்தைப் பெற்றிட சோர்விலாமல் உழைத்து நாட்டை விடுவிப்பதும் தான் அந்த நெருஞ்சி முள் நெருடலாகும்.

சுயராஜ்ய உணர்வுகளை மக்களிடம் எவ்வாறு ஊட்டுவது என்று சிந்தித்தார். கவிதைகளைப் புனைந்து அதன் மூலம் மக்களைத் தட்டி எழுப்புவது ஒன்றுதான் அதற்குரிய வழியென்று கண்டார்.

மேடைகள் தோறும் ஆங்கிலேயர் அராஜக ஆட்சியின் கொடுங்கோன்மைகளை விளக்குவது மற்றொரு வழி! மூன்றாவதாக, மக்களது அடிமை மனப்பான்மையை அகற்றி, இந்திய நாகரீகப் பண்பாடுகளை, பழம் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக் கூறி, அவர்களை உணர்வு பெறச் செய்வது என்ற மூன்று வழிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டார் கவிக்குயில்.

ஏழை மக்கள் நிர்கதியாகத் தவிப்பதை மக்களுக்கு உணர்த்தும் கவிதையை எழுதினார் சரோஜினி தேவி. இதோ அந்தக் கவிதையின் இரக்க உருக்க வடிவம்!

"கிழவி ஒருத்தி-
இளமையில் சணல்களையும் குழந்தைகளையும் உறவினரையும்
பேணிக் காத்தவளே; அவள்-
இன்று ஆதரவற்று ஆலமரத்தடியில் அமர்ந்து,
இறைவனின் திருப்பெயரால் இறைஞ்சுகிறாள்
இரக்கம் உடையோர் ஈந்து நடக்கின்றனர்;
மற்றோர் ஈயாமல் நீங்குகின்றனர்;
அதுவும் பொருளன்று; இதுவும் பொருளன்று அவளுக்கு