பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

51

★ நேர்மை, இரக்கம், மரியாதை என்ற மூன்றும் பெண்களுக்கு வழங்கும் மனித நேயங்கள் என்றைக்கும் வெட்கப்பட்டுத் தலையைக் குனியத்தான் வேண்டும். மறந்து விடாதீர்!

★ இந்திய அரசின் கெளரவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உமக்கு இருக்கிறதே என்றா? சரோஜினி தேவி தனது கடிதத்தில்.

மறுபடியும் மாண்டேகு மந்திரி சரோஜினியை எதிர் கேள்வி கேட்டபோது, "போலீசார் செய்த அக்ரமங்களை ராணுவ ஆட்சி மீது எவ்வாறு சுமத்தலாம்?" என்றார்.

அதற்குக் கவியரசி பதில் கூறிய போது: ராணுவ ஆட்சியில் நடந்த போலீஸ் அக்கிரமங்களுக்கு ராணுவ அதிகாரிகள் பொறுப்பன்று என்றால், வேறு யார் தாம் பொறுப்பு; ராணுவத்தையும் மீறிப் போலீஸ்காரர்கள் அவற்றைச் செய்தார்கள் என்று மந்திரி மாண்டேகு நிரூபிக்கப் போகிறாரா? என்று மறுவிடை தந்தார்.

இவ்வளவு உரையாடல் விவரங்களுக்குப் பிறகு, சிறந்த ராஜதந்திரி என்று புகழ்பெற்ற மந்திரி மாண்டேகு சரோஜினி நாயுடு பதிலைக் கண்டு மெளனமானார்.

இலண்டன் நகரில் எடுத்துக் கொண்ட சிகிச்சையால், கவியரசி உடல் தேறி நலமானது. மீண்டும் அவர் இந்தியா திரும்பினார்.

இந்தியா வந்து சேர்ந்ததும், இந்திய அரசாங்கத்துக்கும், வைசிராய்க்கும் ஒரு கடிதம் எழுதினார்; என்ன அந்தக் கடிதம், இதோ:

"பஞ்சாப் ராணுவ ஆட்சியில் ஏற்பட்ட கொடுமைகளை இந்த அஞ்சலிலே விளக்கினார். நடைபெற்ற பஞ்சாப் குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டியது அரசாங்கமாகும்.