பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கவிக்குயில் சரோஜினியின்

நாட்டுக்கு எந்தெந்த சக்திகள் தேவையோ, அவற்றையே பல வியூகங்களில் பாடிப்பாடி அவர் மக்களை எழுச்சிப் பெற வைத்தார்! இதனால், கவியரசி ஒரு தேசியக்கவி என்று மக்களால் மதிக்கப்பட்டார்.

'பாரதமாதா பள்ளி' எழுச்சியென்று அவர் பாடிய பாடலிலே ஒன்று மக்களிடையே மாபெரும் மரியாதையை உருவாக்கியது. அந்தப்பாடல் இதுதான்:

"பாரத மாதாவே!
நீ மிக மிக முதியவள். மிக மிகத் துன்புற்றவள்!
குழந்தைகள் பல ஈன்றவள்! எனினும்,
குன்றாத இளமை உடையவள்!
சின்னாள்களாய் ஏனோ துயில் கொண்டனை?
இனியேனும் கண் விழித்துக்கொள்!
சுதந்திர வழி தவறி அடிமை நெறி நடக்கும்
உன் மக்களை நேர்வழியில் செலுத்து!
இன்னும் ஏன் உறங்குகின்றனை?
உன் குழந்தைகளுக்காக விழிக்கலாகாதா?
அரியாசனத்திலிருந்து செங்கோலோச்சிய நீ
இழந்த அரசை மீண்டும் அடையும் காலம்
வந்துற்றது; துயில் நீங்கிக் கண் விழித்திடு!
அரசை ஏற்ற உன் மக்களை மகிழ்வுடன் காத்திடுக!

பாரதமாதாவுக்கு இவ்வாறு கவியரசி பாடிய பள்ளி எழுச்சிக் கீதம், மக்கள் மனதிலே பதிந்து விடியல் காலங்களில் விடிவெள்ளிப் பாடலாக பாடிடும் உயிர்நிலைப் பெற்று விட்டது.

அதே நேரத்தில் காந்தியடிகளின் அகிம்சை தத்துவத்தின் செல்வாக்கு, நாட்டிலே பரவி வேரூன்றிப் பரந்து வந்தது. கவியரசி இந்த புகழைக் கண்டு மனம் பூரித்தார். அந்த மக்கள் மதிப்பு கவிக்குயிலையும் ஈர்த்து விட்டது.