நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
77
சரோஜினி தேவி தனது தலைமை உரையிலே பேசும்போது:
"நாடு விடுதலை பெற வேண்டும் என்பதிலே நமக்குள் எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது ஆனால், விடுதலைப் பாராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளைக் கண்டு அச்சப் படவோ, அஞ்சவோ கூடாது. அப்படி பயத்து செத்தால், அவர்கள் மன்னிப்பே வழங்கப்பட முடியாத மாபெரும் துரோகம் செய்தவர்கள் ஆவார்கள்.
நாட்டின் விடுதலைக்காக தாம் செய்ய வேண்டிய தியாகம் என்ன? அதற்காகக் கடக்கவேண்டிய தூரம் எவ்வளவு? என்றெல்லாம் சுதந்திரக் கணக்கை போட்டு மனக்களைப்பும், சோர்வும் கொள்வது ஒரு விடுதலைக் போராட்டதுக்கு அழகாகாது.
அச்சத்தை அகற்ற வேண்டும், அயர்வைத் தூக்கி எறிய வேண்டும்; நம்பிக்கை நமக்கு உடல் நரம்பாக அமைய வேண்டும். துணிவே துணை என்ற மந்திரத்தைச் சதா சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். தமக்குள் ஒற்றுமை உருவாக வேண்டும்; எல்லோரும் சகோதரர்களே என்ற எண்ணம் எழுச்சிப் பெற்றால், நாம் ஒரு புதிய மகத்தான் சக்தியைத் தோற்றுவித்தவர்கள் ஆவோம்!
வெளிநாடுகளில் உள்ள நமது இந்தியர்களும் நாமும் ஒன்றுபட்டு நமக்குப் பூட்டப்பட்ட அடிமைச் சங்கிலியின் ஒவ்வொரு இரும்பு வளையத்தையும் நொறுக்கி உடைத்தாக வேண்டும்.
பெருமைக்குரிய தமது பாரதமாதா காங்கிரஸ் கொடியை ஊர்தோறும் உயர்த்திப் பிடித்து, அதற்கான கொள்கைப் பிரச்சாரங்களைச் செய்யவேண்டும். மக்களை மகாசபை உறுப்பினர்களாக்க தாம் அயராது உழைத்தாக வேண்டும்.