பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

கவிக்குயில் சரோஜினியின்

மகாத்மா காந்தியடிகளுக்கு நாடெங்கும் புகழ் பெற்ற பல தளபதிகள் உருவானார்கள். அவர்களுள் ஒருவராக பெரும் புகழுடன் சரோஜினிதேவியும் விளங்கி வந்தார்.

அவருடைய கவிதை ஆவேசம், நாட்டு விடுதலைக்கான தேசபக்தி வெறிவேகம் பெரும் வெள்ளத்தைப் போல் பெருகியது. இந்த சிறப்பு நாடெங்கும் எதிரொலித்தது. மக்கள் எல்லோரும் எதற்கும் தயாரான நிலையிலே காத்துக்கிடந்தார்கள்:

"மோகன கிருஷ்ணன் இளம் வயதிலே வெண்ணெய் திருடினார்! மோகன்தாஸ் காந்தி உப்பைத் திருடினார்! என்ற கருத்துள்ள பாடல் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

1930-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் நாள், காந்தியடிகள் உலகப் பிரசித்தி பெற்ற உப்புப் போராட்டத்தை தண்டி என்ற இடத்திலே தொடங்கினார். அவரைப் பின்பற்றித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் சென்றார்கள்.

இந்த உப்புப் போராட்டம் இருபத்து நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன; காந்தியடிகளும்-தொண்டர்களும் சரோஜினி தேவி எழுதியப் பாடல்களைப் பாடிக் கொண்டே (Marching song) பஜனை கோஷ்டிகளைப் போல நடந்தார்கள்.

காந்தியடிகள் தண்டியில் எடுத்ததோ ஒருபிடி உப்பு தான்! அந்தப் பிடி உப்புப்போர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. இப்படி ஒரு அறப்போராட்டமா? இதுவரை எவரும் எந்த நாட்டிலும் உப்பு சப்பு இல்லாத ஒரு உப்புப் போராட்டத்தை, ஓர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் செய்தது இல்லையே என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.