பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கவிக்குயில் சரோஜினியின்

கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் பிரிந்திருந்த துன்பத்தை மறந்தார்! சிறைவாசமே சுகவாசமாக மதித்து, பூத்துக் குலுங்கும் பூக்களின் வண்ண நிறங்களையும் அதன் மணங்களையும் சுவாசித்து, சரோஜினி தேவி நாள்தோறும் மகிழ்ச்சி அடைந்தார்

அந்த மலர்களின் மனத்திற்கு நாட்டு நிலையை ஒப்பிட்டுக் கவிதைகளை எழுதிக் கொண்டே இருந்தார். அவர் எழுதிய பாடல்களிலே ஒன்று இது:

“செவ்வண்ண பூக்களே! உங்களுடைய அழகான நிறத்துக்கு நிகராக எதை நான் ஒப்பிடுவேன். மணமகள் ஒருத்தி அணியும் ஆடைகளை ஒப்பிடுவதா? உங்களது நிறம் நாகமணிக்கு ஒப்பானவையா?”

"காலையில் உதயமாகும் சூரியனுக்கு முன்னே காட்சி தரும் கோலக்கடலின் ஒளிச் சிதறல்களுக்கு இணையானவை உங்களது நிறங்கள் என்பதா!"

"அழகரசி பத்மினிக்காகப் போரிட்டு மடிந்த அரசர்களின் மார்பிலே இருந்து வடிந்த ரத்த நிறத்தை ஈடு சொல்வதா! உவமையே உரைக்க முடியாத வண்ணத்தோடு பூத்துக்குலுங்கும் உங்களை எதற்கு ஒப்பிடுவது!" என்று வியந்து வியந்து கவிதைகளை எழுதினார்!

செண்பகமலரே! உனது இதழ்கள் அழகானவை; நீண்ட தூரம் மணத்தை வீசி அனைவருக்கும் நீ இன்பம் அளிக்கிறாயே! பெண்கள் உன்னைத் தலையில் சூட்டி, பிறகு மண்ணிலே மறைக்கின்றாயே; அது போலத்தான் மக்களது புகழும்-பெயரும் ஒரு நாள் மறைந்து விடுமோ!

செண்பக மலர் என்றதுமே. இன்பத்தேன் வந்து காதில் பாய்கிறதே. அது எத்துணை இன்பம் அளிக்கின்றது தெரியுமா! எவ்வனவு விரைவாக மலர்கிறீர்கள்! பிறகு எவ்வளவு விரைவாக வாடி விடுகிறீர்கள்?