பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

கவிக்குயில் சரோஜினியின்


15. வெள்ளையனே வெளியேற போர்! சரோஜினி கைது!

இரண்டாவது உலகப்போர் 1989-ம் ஆண்டு ஆரம்பமானது. ஏதேச்சாதிகார ஆணவத்தால் பிரிட்டிஷ் பேரரசு காந்தியடிகளையும் கேளாமல், காங்கிரஸ் கட்சியையும் அழைத்துப் பேசாமல், காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள அமைச்சரவைகளையும் கலந்து ஆலோசியாமல், இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தி விட்டார்.

இந்த சர்வாதிகார அகம்பாவப் போக்கினை எதிர்த்துக் காங்கிரஸ் அமைச்சரவைகள் தங்களது மந்திரி சபைகளைக் கலைத்துப் பதவிகளைத் துறந்தன. பிரிட்டிஷாரின் இந்த எஜமானப்போக்கு மக்களுக்குக் கோபத்தையும் கொதிப்பையும் உருவாக்கிற்று!

காந்தியடிகள் அதனால் பேச்சுரிமைப் போராட்டத்தை 1940-ம் ஆண்டு துவக்கினார். வெள்ளைக்காரர்களின் இந்த தான்தோன்றித்தனத்தை விளக்கி நாடெங்கும் பொதுக் கூட்டங்களை நடத்தும்படி அவர் ஆணையிட்டார்.

இந்த பேச்சுரிமைக்கு அரசு தடை போட்டால், வீதிக்கு வீதி, சந்துக்கு சந்து, கிராமத்துக்கு கிராமமாக கூட்டம் நடத்தாமல், தனி நபர்கள் ஆங்காங்கே சென்று வெள்ளைக்காரர்களின் கொடுங்கோல் ஆநியாயங்களை எதிர்த்து மக்களிடம் விளக்குங்கள் என்று உத்தரவிட்டார்.

இந்தப் போராட்டத்திற்கு அகிம்சை அண்ணல் தனி நபர் சத்தியாக்கிரகம் என்று பெயரிட்டார். இந்த தனி நபர் பேச்சுரிமைப் போரை வினோபயோவே, ஜவஹர்லால் நேரு போன்றவர்களைத் தலைமையேற்று நடத்துமாறு காந்தியடிகள் கேட்டுக் கொண்டார்.