கவியுறு செல்வ மெல்லாம்
கவினுறக் கண்டார்; கற்கச்
செவியுறு செல்வ மெல்லாம்
செம்மையாய்ச் செய்து தந்தார்;
புவியுறு செல்வ மான
பொருளின்று வேண்டு மென்று,
சவியுறத் தெளிக்தோய்! இன்றுன்
சம்மதம் எதிர்பார்க் கின்றரர்.
'சாதலே கேர்ந்த போதும்
சான்றவர் வந்து கேட்டால்
ஈதலே நேர்மை’ என்போர்
ஈன்றனர் உன்னை! நீயும்
ஒதலே நேர்ந்தாய்; இன்னும்
உறுவதை உணர்ந்து நன்மை
ஆதலே நேர, மேலே
ஆவன செய்வாய்” என்றான்.
சாந்தியின் பணிந்த மொழி
நந்தனிவ் வாறு கூற
நல்லதென் றமர்ந்து, நன்றாய்ச்
சிந்தனை செய்த பின்னர்
சிரித்தவள் வினவ லானாள்:
“விந்தைதான் எல்லாம்; நீங்கள்
விட்டுக்குத் தலைவர்; இன்று
சொந்தத்தா ரத்தை யேனோ
சோதனை செய்வ” தென்றே.
29