நந்தன், காரணம் கூறல்
“ஐந்தல்ல, பத்தும் அல்ல.
ஐம்பதும், நூறும் அல்ல;
சொந்தத்தில் தொழிலொன் றின்றிச்
சொத்துள்ளோர்க் காயு ழைத்து,
நொந்துவந் தோர்கட் கெல்லாம்
நோய்தீர்த்துச் வாழச் செய்ய-
சிந்தித்துச் செப்பாய்,- அன்பே!
சிலலட்சம் செலவி” தென்றான்.
“'கோடியே எனினும் கொண்ட
கொள்கைக்குப் பெரிதன்' றென்று
பாடிய கவிஞர் தம்மைப்
பக்கத்தில் வைத்துக் கொண்டு,
நாடியே நன்மை தீமை
நாம்பேசக் கூட வேண்டாம்;
கூடுமேல் உள்ள தெல்லாம்
கொடுப்பதே பெருமை யாகும்.
அடுப்பதை அறிந்து கூறும்
அறிஞர்கை தாழ வேநாம்
கொடுப்பது கூடக் குற்றம்;
குறித்ததைக் குறுக்கீ டின்றி
எடுப்பதற் கேற்ப, நல்ல
ஏற்பாடு செயல்மே” லென்று
படிப்பதை யெல்லாம் ஆய்ந்து
படித்தவள் பகரக் கேட்டார்.
30