நொந்திங்கு வருவோர்க் கெல்லாம்
கோய்தீர்த்து வாழச் செய்ய,
இந்தவூர் தன்னில் 'நந்தன்'
என்னுமோர் தெய்வந் தன்னை
வந்ததும் இருக்கக் கண்டோம்,
வயிறார உண்டோம்; புல்லும்
தந்தெமை யனுப்ப வேநீர்
தடுப்பதும் தகுமோ? என்றர்.
நாகப்பன் கொண்ட அழுக்காறு
ஞானந்தான் பெருகி கின்ற
நந்தனின் செயலைக் கேட்டான்;
வானந்தான் இடிந்த தன்றேல்,
வையந்தான் வெடித்த தன்றேல்,
ஈனந்தான் மலையாய் மேலே
இடிந்தின்று வீழ்ந்த தென்றே
மோனந்தான் முகத்தைத் தாழ்த்த
மூடிவாய் விலகி நின்றான்.
ஏகப்ப னாகி ஊரில்
இதுகாறும் இருக்தான்; ஏக
போகப்ப னாகி எல்லாம்
பொருக்தியே துய்த்தான்; போக
சோகப்ப னாகி யின்று
சொல்லருக் துயரால், சோக
நாகப்ப னாகி நிற்க
நவின்றனன் கிட்ட கனா!
54