இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கெட்ட அச் சிறுகா ளிக்கும்
கேள்வியே சிறிதும் அற்ற
துட்டன் அக் கிட்ட னுக்கும்
தோன்றாத தனைத்தும் தோன்றப்
பட்டென உளத்தில் பாய்ந்து
பளிச்சென ஒளிர, 'எம்மை
விட்டது சனியன்' என்றே
விழுந்தவர் வணங்கலானார்.
“வணங்கவும் வேண்டாம்; எண்ணி
வருந்தவும் வேண்டாம்; யாரும்
பிணங்கலென் பதுதான் இன்றிப்
பிறரையும் தமராய் ஏற்றுக்
குணங்கொண்டு குற்றம் நீக்கிக்
குறை தீர்ந்திக் குவல யத்தில்
இணங்கிநாம் வாழ வேண்டும்"
என்றனன் இறும்பூ தெய்தி!
60