பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூதலத்தையே கண்டு தெளிந்துணர்ந்தாற் போன்றதொரு ‘கருவம்’ முகிழ்க்கிறது.

இத்தகைய உயர்வினுக்கு உடந்தையாகும் குழந்தையின் சக்தியில் உதிரத்தொடு உதிரமாக-ஊனுடன் ஊனாக-உள்ளத்தோடு உள்ளமாக உறைந்தூறும் சக்திக்கு உயிர்ப்பாகும் உணர்வு ‘அன்பு’ எனும் ஒருவகைக் ‘கோட்பாடு’ தானே? ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்கிறது தமிழ்மறை.

“உங்களுக்குத் தொழிலிங்கே
அன்புசெய்தல் கண்டீர்!”

அன்பு செய்தல் அறம் எனச் செப்பவில்லை; அன்பு செய்வதைத் தொழிலெனக் காட்டுகிறார்; ஆணை இது!

ஆணை என்றால், அழுத்தமான ஆணை!...

பாரதியின் வாக்கு இனிக்கும். இதுவே உண்மை!

இவ்வுண்மைக்குப் பிள்ளையார் சுழிபோடும் தகுதி பெற்றது ‘வாழ்க்கை’. ‘பிறவா வரம்’ வேண்டிய மெய்த்தவத் தொண்டர்கள் பட்டியலில் சேர வாய்ப்பிழந்து, ஆனால், சாக்காடு என்கிற முடிவின் ஆரம்பத்தை நம்பிப் பிறப்பெடுக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்ட தறிகெட்ட சுழற்சியில்,

17