பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையே விதியும் வினையும் இணைந்தது தானே?

தத்துவ சிந்தனைகளே விளக்கினால், அவை நீர்மோர் போல ஆகிவிடும்.

கடவுளைக் காணுவதற்கு முன்னம், கவிஞரைக் காணுவோமா?

விரிகதிர்க் காவிரிக்கு காவியப் பாங்கு மிகுதி. ஆதலின், 'கலைவாணன்' கவிஞனாக வாழ்ந்து, பரிணாம வளர்ச்சி கண்டு, பரிபக்குவப்பண்பு பெற்று பிறகு, கடவுளே ‘வம்புக்கு’ இழுக்கும் சக்தியை, கவிஞராக முனைந்து நின்றுபெற்று, அந்த முதிர்ச்சியில் அல்லது, முதிர்ந்த துணிவில் ‘வல்லவனே’யே அரங்கிற்குக் கரம் பற்றிக் கூப்பிடத் துணிகிறாரென்றால், அந்தத்துணிச்சல் ‘தன்னேரிலாத தமிழ்’ தந்த சீதனமாகும். அந்தத் தமிழை வாழ்த்திவிட்டு, அதோ, ‘ஆளும் மனிதன்’ ஆண்டவன் நிற்கிறான் ‘அவனே’யும் வாழ்த்தி வணங்குவோம். கவிஞனைத்தானே தேடுகிறீர்கள்? இதோ, கவிஞன்!

இறைவனிடமிருந்து மனிதன் எப்போதுமே ஒதுங்கியோ, ஒதுக்கப்பட்டோ நிற்பதில்லை!

வேதாந்தக் கருத்துக்கள் இவ்வாறுதானே. சொல்கின்றன?

28