பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞனையும் கடவுளையும் பஞ்சாயத்துக்குக் கொணர்ந்து ‘வேடிக்கை’ பார்த்து, ‘வேடிக்கை’ காட்டும் கலைவாணனையும் பார்த்துப் போற்றிப் புன்னகை பூக்கவேண்டிய நேரம் எட்டி நிற்கிறது!

கவிஞனைப் படைத்தான் கடவுள்.

ஆனால் கவிஞனை கடவுளையே படைத்து விட்டான்! இதன் விளை பலனாக விளைந்தது ‘சிருஷ்டி கருவம்.’ இந்தப் படைப்புப் பெருமிதமோ, கவிஞனுள் உயர்வு மனப்பான்மையைப் பெருக்கியது. ஆகையால், ‘ஆதியந்தமிலானை’க் காட்டிலும், தானே உயர்வுடையவன் என்னும் எண்ணத்திளைப்பு மேலோங்குகிறது. பிறகு , கேட்டக வேண்டுமா? கவிஞன் ஐயனிடம் தன் கைவரிசையைக் காட்ட முனைகிறான்.

இந்நிலை தொடர்ந்தால், பரம்பொருளுக்குக் கோபம் வராமல் இருக்குமா? இருக்கலாமா? கோபம் வருகிறது. கோபம் என்றால், கொட்டு முழக்கோடு வருகிற கோபம் அது.

என்றாலும், கவிஞன் கனவுகளிலே மூழ்கப் பழகியவன் ஆயிற்றே! முந்தைப் பழவினையின் முழுமூச்சான முதல்வனின் சோதனைகளையெல்லாம் தன் கவி வன்மையால் சாதனைகளாக ஆக்குகிறான்.

இத்தகைய ‘போட்டி’க்கு முடிவு ஏற்பட்டது.

கடவுள் படைத்தவை காலத்தால் மாறின.

29