இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
" மாங்கொழுந்தில் முகம்பார்த்துக் கொள்ளு கின்ற
வரிக்குயிலே! நீஉனது துனேவி யோடு,
தூங்குகின்றாய், இறகோடு இறகு சேர்த்து,
(உன்னைத்
தாங்குகின்ற மரக்கொம்பு, உனக்கு ஊஞ்சல்;
தழுவுகின்ற இளம்மனைவி எனக்கு ஒடம்!
தீங்கரும்பை நீதின்ன மாட்டாய், நீயோ
(நானும் தின்றேன்.”
காதல் அனுபவங்களுக்கு வாயில்லாச் சீவன்களும் உடந்தையாவது இயற்கை நெறி அல்லவா?
காதல் விளக்கங்கள் எவ்வாறு பலவகைப் பட்டனவோ, அதே பாங்கில் தான், காதலின் அனுபவங்களும் வகை வகையானவை!
இங்கே ஒரு பாடல்: தலைவியின் காதலைச் சித்திரிக்கிறது:
"......சோலையிலோர் நாள் எனையே
தொட்டிழுத்து முத்தமிட்டான்:
துடுக்குத் தனத்தை என் சொல்வேன்?
மாலைப்பொழுதில் இந்த மாயம் புரிந்த
வாய்விட்டுச் சிரித்துப்பின் (செம்மல்
போய் விட்டானேடி தோழி..."
45