பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் கண்ணதாசன் அறிமுகப்படுத்தி வைத்த காதல் ஜோடிக்கு ஒருபடி மேம்பட்டவர்கள் இவர்கள். துடுக்குத் தனமான கன்னி அவள். அதனால்தான், அந்த ஆணழகனின் துடுக்குச் செயலுக்கு அனுமதி வழங்கியிருக்கிறாள் சோலேயில் தொட்டிழுத்து முத்தமிட்டு விட்டு விழிக்கு மறைந்திட்டானாம் அவன்-அக்கள்வன்!- உள்ளங்கவர் கள்வன்!

‘முத்தம்’ என்ற சொல் இனிப்பது போல, முத்தான இப்பாவும் இனிக்குமே?-புரட்சிக் கவியின் ‘’கவிதை நயம்’ என்னுடைய விளக்கவுரைக்காகவா காத்திருக்கும்?- ஊஹும்!

46