இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொன் போன்ற உடலல்லவோ !
வாழாத மனிதரையும்
வாழவைக்கும் சேயல்லவோ!
பேசாத தெய்வத்தையும்
பேசவைக்கும் தாயல்லவோ !
தாழங் குடையல்லவோ !
தள்ளாடும் நடையல்லவோ !
மாலைப் பொழுதல்லவோ !
வண்டாடும் செண்டல்லவோ!...”
கவிஞர் கண்ணதாசனை ரசிப்பதற்கு மனம் வேண்டும்; தெளிவு வேண்டும்; படிப்பும் பக்குவமும் வேண்டும்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?...
9