பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. இன்னும் விளங்காத அதிசயம்!

உணர்ச்சிகளால் வாழ்பவன் கவிஞன். அவ்வுணர்ச்சிகளை வாழ வைப்பது அவனது கவிகள்.

உலகத்தை உரைகல்லாக்குகிறான் கவிஞன். அவன் பாடும் பாக்கள், அவன் கைக்கொண்டொழுகி வழிநடக்கும் அந்தக் ‘காவிய மனத்’திற்கு உரைகல்லாகிறது.

பாடுபவன் கவிஞன். அவனுக்குப் பிறிதொரு விதியும் உண்டு.

பாடவைப்பவனும் கவிஞனே! ஆமாம்; பாட வைப்பவனே கவிஞன்!

இயற்கை நமக்குத் தாய்வீட்டுச் சீர் போல. உரிமையை உணர்கிறோம்; ஆனால், உறவை ஒட்டச் செய்யும் பாவனை நமக்குக் கைகூடி வளர்வது அரிது. அரிதான மனித வாழ்வில் ‘அரிமாநோக்கு’க் கொண்டு வாழ்க்கையை உலக உருண்டையில் வைத்துச் சுற்றிப் பார்க்கும் கலை மனம் கொண்ட கவிஞனுக்கு எல்லாமே விளையாட்டுத்தான்: எல்லாமே வினயந்தான்! குழந்தையை எண்ணி, அதன் வழியே பெரியவர்களைக் கணிக்கவும், பெரியவர்களை ஆராய்ந்து

10