பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரத்திற்கு மேல் எவ்விதத்திட்டமிடலின்றி இயல்பாக எழுந்த கேள்விகள், பதில்கள், கருத்துரைகள், விளக்கங்கள் என்று பரிமாறப்பட்ட கருத்துக்களை ஒலி நாடாவில் பதிவு செய்த வேலுசாமி இடையிட்டுக் குறுக்கீடுகளாக கேள்விகளும் எழுப்பினார். விகடனின் 16 பக்க வெளியீட்டில் இடம் பெற்ற செய்திகள் வேலுசாமியின் தொகுப்புதான். கவிஞர் தம் உரையாடலை விகடன் இதழ் கீழ்க்கண்ட முகப்புரையுடன் வெளியிட்டது. அதுவே ஒரு கவிதைக் கருத்தரங்காக, பெரும் வாசக வரவேற்புப் பெற்றுப் புகழ்பெற்றது. 'தமிழகக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் மீரா. புதுக்கவிதையை இயக்கமாக வளர்த்த முன்னோடிகளில் ஒருவர். இவரது கனவுகள் + கற்பனைகள் - காகிதங்கள் என்னும் கவிதைத் தொகுதி புதுக்கவிதையைத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற கவிதைத் தொகுதி எனலாம். இவரது 'ஊசிகள் என்னும் கவிதைத் தொகுதியில் இழையோடுகிற நையாண்டியும், ஊசிக் குத்தல்களும் இன்றைய இளைஞர்கள் படித்து ரசிக்க வேண்டியவை. பாலா என்ற பெயரில் நவீன இலக்கிய உலகம் அறிந்த ஆர். பாலச்சந்திரன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆங்கில உதவிப் பேராசிரியர். இவர் எழுதிய புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை' என்ற நூல் புதுக்கவிதையின்