பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றையும் புதுக்கவிதையின் வகைப்பாடு களையும் பற்றித் தெள்ளத் தெளிவாகக் கூறும் சிறப்பு விமர்சன நூலாக இன்று வரையிலும் திகழ்கிறது. . கவிஞர் மீரா படைப்பு ரீதியாகவும் பாலா இலக்கிய விமர்சன நோக்கிலும் கவிதை பற்றி உரையாடியதிலிருந்து தொகுத்த சில செய்திகள்.' கவிஞர்மீரா அவர்களின்நூல்கள் விற்பனைவரலாறு படைத்து நின்ற நாட்கள் அவை. தற்போது நெல்லை சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பாலா அப்போது புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றி வந்தார். தன் சிறுகதைகள் கவிதைகள் மூலமாகப் புகழ்பெற்றிருந்த இரா. வேலுசாமி உரையாடலின் கருத்துக்களின் முதன்மை கருதி முழுஉரையாடலையும் தன் கைப்படப் பிரதியெடுத்து தனிநூலாக வெளிவர வேண்டும் என்று அன்னத்தை வேண்டினார். கவிஞர் மீரா அன்னத்தின் நிறுவனர். பாலா அன்னம் தந்த நூலாசிரியர்களில் ஒருவர். எனினும் காத்திருப்பு நூல்களின் பட்டியலில் புத்தகப் பேறு காலத்திற்காக தவம் நிகழ்த்தி நின்றது இந்நூல். அன்னம் ஒய்வெடுத்து விட்டது. எனினும் இந்தப் புத்தாயிரத்தில் இதனை அகரம் கொணர்கிறது. தம் நிறைவான பங்களிப்புகளாலும் ஆரவாரமற்ற வாழ்வியலாலும் நவீன இலக்கிய உலகம் அறிந்த படைப்பாளி கவிஞர் மீரா. அவ்வகையில் அவரின் நோக்கும் போக்கும் கொண்ட இளவல் கவிஞர்பாலா.