பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


பாடிய பாடல் ஒன்ற்ன் பொருளையும் காண்போமாக :

மாக்கோதை என்பவர் சேர மன்னர் குடியினர். இஃது இவரது பெயர் தொடக்கத்தில் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை என்பதில் அமைந்துள்ள முதற் சொல் லால் நமக்குப் புலனுகிறது. சேரர் பலராதலின் அவர்களுள் ஒவ்வொருவரையும் வேறுபடுத் திக் காட்டுதற்குச் சில குறிப்புக்களையும் அவர்கள் பெயருடன் சார்த்திப் பேசப்படுவது தொன்று தொட்ட மரபு. அம்முறையில் மாக்கோதை என்னும் சேரர் குடியினர் கோட்டம் பலம் என்றும் இடத்தில் தம் பூத உடல் விடுத்துப் புகழ் உடல் பெற்ற காரணத்தால், அதாவது இறந்ததல்ை சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்பாரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பினை அறிதற்கு இல்லை. இவர் இல்லறத்தை இனிது நடத்தத் தம் மனத்துக்குகந்த மனையாளோடு தம் வாழ்வு நடத்தியவர் ஆவர். இவரும் இவரது இல்லாளும் மனம் ஒத்துத் தம் இல்லறத்தை நடத்தி இருக்கின்றனர். கனவிலும் நனவிலும் பிரியாது மனம் கலந்து வாழ்ந்திருக்கின்றனர். இங்ங்னம் வாழ்வு நடத்தியதால்தான், தம் பெருங்கோப்பெண்டு இறந்தபோது, அவ்வம்மையைப் பிரிந்திருக்க