பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


ஆற்றாத காரணத்தால்தான் இவ்வரசப் புலவர் கையறு நிலையாகிய அருங்கவியைப் பாடி இருக்கிருர். இவ்வொரு பாடலாலே இவ ரும் கவி பாடவல்ல காவலர் இனத்தில் சேரக் கூடியவராயினர். இவரது பாடல் புறநானூற்றில் காணப்படுகிறது.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக் கோதை தம் மனையாளைப் பிரிந்திருக்க இயலாது, அவ்வம்மையோடு தாமும் உயிர் விடுதற்கு இல்லையே என்னும் கருத்தினை ' "இன்னும் வாழ்வல்? என் இதன் பண்பே ?” என்று குறிப்பிடுவராயின், இவர் தம் மனைவி யார் மாட்டு வைத்திருந்த அன்பு வெளியாகிற தல்லவா ? பூம்பள்ளியில் படுத்துத் துயில வேண்டியவள் ; இதுபோது இறந்து அழல் பள்ளியில் படுத்து விண்ணடுசெல்கின்றனளே என்று வருந்திக் கூறிய அடிகளாகிய

"ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை"

என்பன எவருடைய நெஞ்சத்தைத்தான் உருகாதிருக்கச் செய்யும்? இவரும் பிரிவு காரணமாக மனையாளோடு உடன்கட்டை ஏறி இருப்பர். அவ்வாறு உடன்கட்டை ஏறுதல் மாதர்கட்குரிய செயலாக இருந்தமையின், இவர் உடன்கட்டை ஏறி உயிர்விடாது இருந்தனர் போலும் !